பெட்ரோல் டீசல் விலை உயர்வு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல் விலை ரூ.1.69 ம் ,டீசல் விலை 50 பைசாவும் உயர்த்தப்பட்டது. இதனுடன் உள்ளுர் வரி,வாட் வரிக்கு ஏற்ப விலை உயர்வில் மாற்றம் இருக்கும்.
பெட்ரோல் டீசல் விலையை 15 நாள்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததால் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிந்ததால் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்து உள்ளது. இது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. விலைவாசி இன்னும் அதிகரிக்கும் நிலைமை உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.