லிங்குசாமி இயக்கி சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான அஞ்சான் படம் சூர்யாவின் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை, இதனால் படம் ஃப்ளாப் ஆகியுள்ளது மட்டுமின்றி சமூக வலைதளங்களில் மிக மோசமாக கிண்டல் அடிக்கப்பட்டது, இதனால் சூர்யாவும் லிங்குசாமியும் ஏற்கனவே கோபத்தில் உள்ளனர், சமூக வலைதளங்களில் இப்படத்தை கிண்டல் அடிப்பது குறித்து தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தனர்
இந்நிலையில் ஏகக்கடுப்பிப்பில் இருந்த சூர்யாவுக்கு மேலும் எரிச்சலை கிளப்பும் சம்பவம் நடந்தது, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் அருகே நடைபெற்றது, படப்பிடிப்பில் சூர்யா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த போது படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் சிலர் சூர்யாவையும் அஞ்சான் படத்தையும் பற்றி கிண்டலடித்து கமென்ட் அடித்தார்கள்,
இதனால் கோபமான சூர்யா ரசிகர்களிடம் கோபமாக பேசியுள்ளார். ஆனால் சூர்யாவின் கோபத்தை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் ரசிகர்கள் மீண்டும், மீண்டும் கிண்டல் அடிக்க கடும் கோபத்துக்குள்ளானார் சூர்யா. இதனால் மாஸ் படக்குழுவினர் காவல்துறைக்கு தகவல் கொடுக்க, காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து ரசிகர்களை விரட்டியடித்தனர்,
இதனால் கடுப்பான சூர்யா, அஞ்சான் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிவிட்டு படப்பிடிப்பை ரத்துசெய்துவிட்டு வெளியேறிவிட்டார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.