நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்தவர்களுக்கு புதிய வடிவில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அது எப்பொழுதும் போல் கருப்பும் வெள்ளையுமாக இல்லாமல் கலர்புல்லாக இருக்க உள்ளது. முன்பு உள்ள அட்டைகள் எளிதில் சேதமடைவதாக இருந்தன ,ஆனால் இப்போது தரப்பட உள்ள அடையாள அட்டைகள் பிளாஸ்டிக்கில் எளிதில் சேதமடையாத வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது.
புதிய வாக்காளர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் இந்த அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்படும். அதன் பின்பு பழைய அடையாள அட்டை வைத்து இருப்பவர்களுக்கு வழங்கப்படும். இதனை அச்சிடிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.