சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவாரோ என ஒரு கூட்டமே காத்துக் கொண்டு இருக்கிறது. அதே வேளையில் அவர் அரசியலுக்கு வந்து விடக்கூடாது என ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது. இப்போது அமைந்து உள்ள பாஜக அரசு அமைவதற்கு முக்கிய காரணம் மோடி என்னும் மந்திர சொல். அது போல் ஏதாவது மந்திரம் செய்து 2016 இல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என தமிழக பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதற்காக அவர்கள் கையில் எடுத்து இருக்கும் ஆயுதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகும். ஆம் அந்த ஒரு மனிதனால் தமிழக மக்களையே தன் பக்கம் திருப்ப முடியும். எனவே ரஜினியை பாஜகவில் சேர்த்து, அவரை 2016 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது தான் மோடியின் திட்டம். இந்த அசைன்மென்ட்டை அவர் பாஜக தலைவர் அமித் ஷாவிடம் கொடுத்து உள்ளார். அவர் இதனை வெற்றிகரமாக செய்து முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லிங்கா படப்பிடிப்பு முடிந்த பிறகு இது குறித்து ரஜினியிடம் அமித் ஷா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவதை ஜெயலலிதாவும், கருணாநிதியும் துளி கூட விரும்ப மாட்டார்கள். எனவே அதனை தடுப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்வார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.