சீன அதிபர் சீன நாட்டில் சட்ட விரோதமாக போதை பொருள் பயன்படுத்துவோர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி இருந்தார். இந்த உத்தரவு கடந்த ஜூன் மாதம் அன்று வந்தது . இதனையடுத்து போலீஸார் நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். இதில் பல முக்கியமான பிரபலங்கள் பிடிபட்டு வந்தனர்.
இந்நிலையில் அந்த வரிசையில் ஜாக்கி சானின் மகன் சிக்கியுள்ளார். ஜாக்கி சான் மகன் ஜெய்சி கான் இவருக்கு 31 வயது ஆகிறது. இவரது வீட்டில் இருந்து 100 கிராம் மதிப்புள்ள போதை பொருள் எடுக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையின் மூலம் அவர் போதை பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் போலீஸார் இவரை கைது செய்தார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.