தற்போது விஜய் நடித்து வரும் படம் கத்தி. இதனை துப்பாக்கி பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். இந்த படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பு. இது இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு வேண்டிய நிறுவனம் என்பதால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் 65 அமைப்புகள் ஒன்று கூடி உள்ளன.
இந்நிலையில் இந்த படத்தில் இலங்கை தமிழர்களை அவமதிக்கும் காட்சி இடம்பெற்று உள்ளது. அதனால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். ஒரு திரைப்படம் சென்சார் போர்டு சென்று சர்டிபிகேட் வாங்கிய பிறகுதான் அந்த படம் திரையிடவே அனுமதிக்கப்படுகிறது. கத்தி படம் சென்சார் போர்டுக்கு சென்று வந்த பின்னர் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகவேண்டுமே தவிர படம் தயாராகிக்கொண்டிருக்கும் போதே படத்தை தடை செய்ய நீதிமன்றத்தை அணுகக்கூடாது என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.