வாஷிங்டன்: சிரியாவில் ஐ.எஸ்.
தீவிரவாதிகள் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின்
ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் முக்கிய
நகரங்களைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், இஸ்லாமிய தேசம் என்ற
தனிநாட்டை பிரகடனம் செய்துள்ளனர். இந்த இயக்கம் பிற நாடுகள் மீதும்
தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஐ.எஸ். இயக்கத்தை அழிக்க
அமெரிக்கா தலைமையில் 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று திரண்டுள்ளன.
ஈராக்கில் அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின்
வான்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.