சீனாவின் அத்துமீறல்கள் தொடர்வது குறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
இந்தியப் பகுதிக்குள் சீனாவின் ஆக்கிரமிப்புகள், அத்துமீறல்கள், ஊடுருவல்கள் ஆகியவை வெளிப்படையாக நடத்தப்படுகின்றன. இது நம் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. மிகத் தீவிரமான இந்த விவகாரத்தை அரசு மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் உரிய வகையில் அறிக்கை வெளியிடுவதோடு, சீன அதிபருக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கடிதம் எழுத வேண்டும் என்றார் அபிஷேக் சிங்வி.
இந்தியப் பகுதிக்குள் சீனாவின் ஆக்கிரமிப்புகள், அத்துமீறல்கள், ஊடுருவல்கள் ஆகியவை வெளிப்படையாக நடத்தப்படுகின்றன. இது நம் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. மிகத் தீவிரமான இந்த விவகாரத்தை அரசு மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் உரிய வகையில் அறிக்கை வெளியிடுவதோடு, சீன அதிபருக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கடிதம் எழுத வேண்டும் என்றார் அபிஷேக் சிங்வி.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.