சியோமி நிறுவனத்தின் எம்.ஐ.3 மொபைல் இந்திய மக்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றதால் அந்த நிறுவனம் தனது அடுத்த மொபைலான சியோமி ரெட்மி 1எஸ் என்னும் புதிய மொபைலை அறிமுகம் செய்தது. அது இன்று பிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வந்தது. இன்று பிற்பகல் 2 மணிக்கு விற்பனை தொடங்கியது. 60,000 மொபைல்கள் விற்பனைக்கு வந்தது. அவை அனைத்தும் வெறும் 5.2 நொடிகளில் விற்று தீர்ந்தது.
இந்த மொபைல் வாங்குவதற்கு முன்பே பதிவு செய்து வைத்து இருக்க வேண்டும். விற்பனை தொடங்கியவுடன் உடனடியாக கிளிக் செய்ய வேண்டும். முதலில் கிளிக் செய்யும் 60 ஆயிரம் பேருக்கு தான் மொபைல். இதனை புக் செய்வதற்கு வேகமான இன்டெர்னெட் வசதி என்பது முக்கியமான ஒன்றாகும். இந்த முறை 3.5 லட்சம் பேர் பதிவு செய்து இருந்தார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.