BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 7 July 2014

கெட்ட வார்த்தையில் திட்டி பழி தீர்த்து கொண்ட கிரிக்கெட் வீரர்


லார்ட்சில் சனிக்கிழமை அன்று எம்.சி.சி. அணிக்கும் ரெஸ்ட் ஆப் தி வேர்ல்டு அணிக்கும் இடையே காட்சி போட்டி நடைபெற்றது. இதில் எம்.சி.சி. அணி வெற்றி பெற்றது. இதில் சச்சின் ,திராவிட்,லாரா,வார்னே, முரளிதரன் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் பங்கேற்றனர். அதனால் இந்த போட்டியை அதிக பேர் பார்த்து ரசித்தார்கள். இதில் இங்கிலாந்து அணியின் கெவின் பீட்டர்சன் எம்.சி.சி. அணிக்காக விளையாடினார். இங்கிலாந்து அணியின் ஆன்ட்ரு ஸ்டராஸ் ஸ்கை ஸ்போர்ட்ஸ் டிவிக்காக வர்ணனையாளர்கள் குழுவில் இடம் பெற்று இருந்தார்.



 அவர் போட்டியின் போது பீட்டர்சன்னை கெட்ட வார்த்தையில் திட்டி விட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ட்ராஸ்க்கு எதிர்ப்பு கிளம்பியது. அதனால் அவர் இன்று அந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டார். தென் ஆப்பிரிக்க தொடரின் போது பீட்டர்சன் ,ஸ்ட்ராஸை முட்டாள் என்றார். அதனை பழி தீர்க்கும் விதமாக ஸ்ட்ராஸ் இதனை பயன்படுத்தி கொண்டார்.





Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media