கன்னட சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்யா. இவர் தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன் , வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தவர். குத்து படத்தின் மூலம் அவரது பெயர் குத்து ரம்யா என்றே மாறி விட்டது. அதனை விரும்பாத அவர் , பெயரை திவ்யா என்று மாற்றி கொண்டார். அரசியல் ஆசையால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து , இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆனார். இளம் வயது பெண் எம்.பி. என்னும் சாதனையையும் பெற்றார். முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்காக சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.
அதன் பின் தற்போது முடிந்த 2014 தேர்தலில் தோல்வி அடைந்தார். அதனால் மீண்டும் சினிமாவுக்கே திரும்பும் முடிவில் இருக்கிறார். தொட்மனே ஹூடுகா என்ற படத்தின் மூலம் மீண்டும் வருகிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.