BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 7 July 2014

சசிகலா கணவர் நடராஜன் கைது?

சில நாட்களுக்கு முன் கராத்தே வீரர் ஷீகான் ஹூசைனி தன்னை நடராஜன் மற்றும் ஏர்போர்ட் மூர்த்தி உள்ளிட்ட சிலர் மிரட்டியதாக அளித்த புகாரில் சசிகலாவின் கணவர் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார், ஷூகான் ஹூசைனி கராத்தே வீரர் மட்டுமின்றி ஒரு சிற்ப கலை நிபுணரும் கூட.

தஞ்சை மாவட்டம் விளாரில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிற்பம் செய்து கொடுத்ததாகவும் அதில் 25 இலட்சம் ரூபாயை பாக்கி உள்ளதை கேட்டதற்கு, நடராஜன் கொலை மிரட்டல் விடுத்தாக புகாரில் கூறியுள்ளார். ஆனால் நடராஜன் தரப்பில் பேசிய ஏர்போர்ட் மூர்த்தியோ 75 இலட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு வெறும் 3 இலட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கைகால்களை மட்டுமே கொடுத்துள்ளதாகவும் இதனால் கொடுத்த பணத்தை கேட்டதாகவும் கூறினார், மேலும் ஷீகான் ஹூசைனி மீது பெண் புகார்கள் உட்பட பல்வேறு புகார்களும் உள்ளதால் அதிலிருந்து தப்பிக்க நடராஜனை வழக்கில் இழுத்துள்ளதாகவும் கூறினார்.

ஹூசைனியின் இந்த புகாரின் பேரில் சென்னை போலீசாரால் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் கைது செய்யப்பட்ட நடராஜனை விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் காவல்துறை இன்னும் இந்த கைது குறித்து உறுதி படுத்தவில்லை என்றும் நெல்லை போலீசார் அவரை கைது செய்யவில்லை என்றும் கூறுகிறார்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media