தேர்தல் முடிந்து புதிய அரசு பதவீயேற்று ஒரு மாத காலம் முடிந்து விட்டாலும் நமது எதிர்கட்சி தலைவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் எதிர்கட்சி தலைவர் பதவியை பெற வேண்டுமானால், மொத்தம் உள்ள இடங்களில் 10 சதவீத இடங்களை பிடிக்க வேண்டும். அதாவது 54 இடங்கள் இருக்க வேண்டும். அந்த அளவு கூட இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. விதிகளின் படி அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி தர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தாங்கள் தான் இரண்டாவது பெரிய கட்சி என்கிற உரிமையில் காங்கிரஸ் இந்த பதவியை கேட்டு வருகிறது.
இது குறித்து முடிவு எடுக்கும் அனைத்து உரிமைகளும் நமது சபாநாயகர் சுமித்ரா மஹாராஜன் கையில் தான் உள்ளது. அவர் நினைத்தால் காங்கிரஸ் கட்சிக்கு இந்த பதவியை தரலாம். ஒரு நல்ல எதிர்கட்சி தலைவரும் இருந்தால் தான் ஒரு நல்ல அரசு அமையும். எதிர்கட்சி தலைவர் இருந்தால் தான் நாம் செய்யும் தவறுகளை சுட்டி காட்டுபார்கள் என்பதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். அதுவே அவர்களின் தவறுகளை திருத்தி கொள்ள உதவும். இதனை உணர்ந்து காங்கிரஸ்க்கு எத்ர்கட்சி தலைவர் பதவி தருவதே சரியான முடிவு.
எதிர்கட்சி தலைவன் என்பவன் எதிரி அல்ல, நம்மை திருத்த உதவும் நண்பன் என்பதை மோடி புரிந்து கொள்ள வேண்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.