BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 7 July 2014

என்ன பயப்படுறியா பாஜக ?? : காங்கிரஸ் கேள்வி

தேர்தல் முடிந்து புதிய அரசு  பதவீயேற்று ஒரு மாத காலம் முடிந்து விட்டாலும் நமது எதிர்கட்சி தலைவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் எதிர்கட்சி தலைவர் பதவியை பெற வேண்டுமானால், மொத்தம் உள்ள இடங்களில் 10 சதவீத இடங்களை பிடிக்க வேண்டும். அதாவது 54 இடங்கள் இருக்க வேண்டும். அந்த அளவு கூட இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. விதிகளின் படி அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி தர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தாங்கள் தான் இரண்டாவது பெரிய கட்சி என்கிற உரிமையில் காங்கிரஸ் இந்த பதவியை கேட்டு வருகிறது. ஆனால் பாஜக இதனை தராமல் தட்டி கழிக்கிறது.



இது குறித்து இன்று பேசிய முன்னால் மத்திய அமைச்சர் கமல்நாத், காங்கிரஸ்க்கு எதிர்கட்சி தலைவர் பதவியை தர பாஜக ஏன் பயப்படுகிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த பதவியை பெறுவதற்கு காங்கிரஸ்க்கு முழு தகுதியும் இருப்பதாக அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்து உள்ளார். இந்த பிரச்சனைக்கு பாஜக சீக்கிரம் முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media