அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் என்னும் பெருமையை பெற்றவர் பாரக் ஒபாமா. இவர் முதல் முறையாக அமெரிக்க அதிபராக ஆனது மட்டும் இல்லாமல் இரண்டாவது முறையும் அதிபர் ஆகி சாதனை படைத்தார். அவர் பதவியில் இருக்கும் போது தான் தீவிரவாதி ஒசாமா பின் லேடனை சுட்டு கொல்லப்பட்டார். அமெரிக்காவில் பிறந்தவர்களுக்கு தான் வேலையில் முக்கியத்துவம் என மக்களை கவர்ந்தார். இப்படி பல செய்தும் இப்போது வந்த கருத்து கணிப்பில் அதிர்ச்சிகுரிய தகவல் வந்து உள்ளது.
இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்காவின் மோசமான அதிபர் யார் என்று கேட்ட போது ஒபாமா என 33 சதவீதம் பேர் வாக்களித்து முதல் இடத்தில் உள்ளார். 2வது இடத்தில் ஜார்ஜ் புஷ் உள்ளார். சிறந்த அதிபரில் இவர் 8 சதவீத வாக்குகள் பெற்று 4 வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் சிறந்த அதிபர் என்னும் பெருமையை ரோனால்டு ரீகன் பெற்றார்.
டிவிட்டர்,பேஸ்புக்கில் அதிக பேரின் ஆதரவை கொண்ட ஒபாமாவால் தனது சொந்த நாட்டு மக்களின் ஆதரவை பெற முடியவில்லை.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.