BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 3 July 2014

கிளைமாக்ஸை நெருங்குகிறது கட்டிட விபத்து மீட்பு பணி !!

கடந்த சனிக்கிழமை 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் அதில் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி அன்றில் இருந்து நடபெற்று வருகிறது. நேற்று மட்டும் 15 சடலங்கள் எடுக்கபட்டன. இதுவரை 49 பேர் பலியாகி உள்ளனர் ,27 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணி இப்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது .இதுவரை 80 சதவீத கட்டிட கழிவுகள் நீக்க பட்டு விட்டன .இன்னும் 20 சதவீதம் தான் உள்ளன ,அவை 2 நாட்களில் நீக்கப்பட்டு விடும்.



அங்கு துர்நாற்றம் வீசுவதால் அதனை சுற்றி உள்ள இடங்களில் குளோரின் பவுடர் தெளிக்கப்பட்டு உள்ளது.அங்கு மீட்பு பணியில் உள்ளவர்கள்,போலீஸார், பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் தடுப்பு ஊசி போடப்பட்டு உள்ளது. இந்த மீட்பு பணியில் 1500 பேர் வரை ஈடுபட்டு உள்ளனர்.இதுவரை இறந்தவர்களில் 12 பேர் ஆந்திராவையும்,9 பேர் தமிழகத்தையும், 5 பேர் ஒரிசாவையும் சேர்ந்தவர்கள். 23 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media