BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 3 July 2014

இடிந்து விழுந்த கட்டிடம் : அதிர்ச்சி தரும் புது செய்திகள்

கடந்த 28 ஆம் தேதி அன்று மவுலிவாக்கத்தில் உள்ள ஒரு 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது . இதில் 72 பேர் சிக்கி இருக்க கூடும் என்னும் தகவல்கள் வந்தன. ஆனால் இப்போது அதிர்ச்சிக்குரிய புது தகவல்கள் வந்து உள்ளது.
இன்றைய தகவல் படி 60 பேர் பலியாகி உள்ளார்கள், 27 பேர் காப்பாற்றபட்டு உள்ளார்கள் . இதனை சேர்தாலே 80 க்கு மேல் வருகிறது. எனவே இதில் சிக்கி இருப்பவர்கள் எண்ணிக்கை 100 ஐ தாண்டி விடும் என்று கருதப்படுகிறது. இன்னும் தங்கள் உறவினர்களை காணவில்லை என பலர் கூறுவதால் அதில் இன்னும் 30 பேர் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.



மீட்பு பணிகள் இன்னும் 2 நாட்களில் முடிந்து விடும். இங்கு வீடு வாங்கியவர்களுக்கு அதற்குரிய பணத்தை திரும்பி தருவதாக இதனை கட்டிய நிறுவனத்தின் உரிமையாளர் கூறியுள்ளார். இந்த விபத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைப்போம் என்று நம்பவில்லை என்றார்கள். இந்த விபத்திற்கு காரணம் அந்த கட்டிடம் சரியான இடத்தில் கட்ட படவில்லை என்பது தான். இப்போது இனி அடுத்த கட்டிடங்களை பற்றி விசாரிக்க போகிறார்களாம்.

வருமுன் காப்போம் என்பது மாறி, வந்த பின் சமாளிப்போம் என்று மாறி வருகிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media