தமிழகத்தில் நீதிமன்றம், அரசு நிர்வாகம், கல்வி ஆகிய மூன்றிலும் தமிழை முழுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குரு உத்சவ், சம்ஸ்கிருத வார விழா ஆகிய உத்தரவுகளை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார் அவர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசியது: இந்தியாவில் வெறும் 14 ஆயிரம் பேருக்கு மட்டுமே தாய்மொழியாக இருக்கும் சம்ஸ்கிருதத்துக்கு வார விழா கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தும்போது, கோடிக்கணக்கான மக்கள் பேசும் மொழியான தமிழுக்கும் வார விழா கொண்டாட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.
இதில் திராவிடர் கழக கட்சியின் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலர் ராஜ்மோகன், வழக்குரைஞர் ச.செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.