சமீபத்தில் உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று ஐஸ் பக்கெட் சாலஞ். ஏ.எல்.எஸ் என்னும் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அது நடத்தப்பட்டது. இது உலகில் உள்ள பல பிரபலமான நபர்களால் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவில் ரைஸ் பக்கெட் சாலஞ் என ஒன்றை ஒருவர் தொடங்கினார். அதாவது உணவு இல்லாத ஏழை ஒருவருக்கு உணவு தர வேண்டும் என்பது இதன் நோக்கமாக இருந்தது.
அதன் பிறகு மை ட்ரீ சாலஞ் என ஒன்று உருவானது. அதாவது ஒருவர் தனது வீட்டில் மரங்களை நட்டு அந்த போட்டோக்களை வெளியிட வேண்டும். நடிகர் மம்முட்டி இதனை செய்ததன் மூலம் இது பிரபலமானது. அதன் பிறகு நடிகர் விஜய் இதனை செய்தார். இன்று நடிகர் சூர்யா செய்துள்ளார். சூற்றுசுழலை பாதுகாப்பதற்கு இது தான் சிறந்த வழி என கூறியுள்ளார். தன் சக நடிகர்களான ஆமிர்கான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, கன்னட நடிகர் சுதீப் மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் இந்த மரம் நடும் சவாலை விட்டுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.