சீனாவில் ஆப்பிளை விட அதிகமாக ஒரு கம்பெனி ஸ்மார்ட்போன்களை விற்பனை
செய்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? நம்பி தான் ஆக வேண்டும்.
ஜீயோமி (Xiaomi)என்ற மொபைல் நிறுவனம் சீனாவில் ஆப்பிளை விட அதிகமாக
ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.
இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் சீனாவின் ஆப்பிள் (Apple of China)
என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு இந்த மொபைல்கள் அழைக்கப்படுவதற்க்கு
காரணம் இந்நிறுவனம் ஆப்பிளை நிறைய காப்பி அடித்துள்ளது.
இவர்களின்
மார்கெட்டிங் யுக்தியும் ஆப்பிளை போன்றே உள்ளது.
ஆப்பிளை காப்பி அடித்து மட்டுமல்லாமல் இப்பொழுது ஆப்பிளை விட அதிகமான
ஸ்மார்ட்போன்களை சீனாவில் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஜீயோமியின்
பிரபலமான மொபைல்கள் ஆன்டிராய்ட் ஓஎஸ்களையே கொண்டுள்ளன. ஆனால் ஜீயோமி
ஆன்டிராய்ட் ஓஎஸ்களை தனது மொபைல்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அதற்க்கு MiUI
என்று பெயரிட்டுள்ளது.
ஜீயோமியின் இப்போதைய இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இவர்கள் தங்கள்
ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் மற்றும் சாம்சங்கை விட குறைந்த விலையில் விற்பனை
செய்கின்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.