ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 1991-96 ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக இருந்த போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்தனர். இதில் ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த வழக்கு பல வருடங்களாக நடைபெற்று வருகிறது.
2003 ஆம் ஆண்டு இந்த வழக்கு பெங்களூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த மாதம் இந்த வழக்கில் இறுதி வாதம் முடிந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக ஜெயலலிதா தனி விமானம் மூலம் இன்று காலை பெங்களூர் வருகிறார். இந்த தீர்ப்புக்காக அனைவரும் காத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த வழக்கு காலை 9 மணி முதல் தந்தி டிவியில் நேரடியாக ஒளிபரப்பபடுகிறது. நீதிமன்றம் 11 மணிக்கு கூடுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.