சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெறுவதற்கு சுப்ரமணியன் சுவாமி முக்கிய காரணம் என்று கூறலாம் . ஏனென்றால் இந்த வழக்கை தொடர்ந்தது அவர் தான். இது தொடர்பாக ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். வழக்கின் ஆரம்ப காலத்திலயே முக்கியமான ஆதரங்களை வைத்து தான் வழக்கை தொடங்கினேன். வழக்கில் கட்டாயம் வெற்றி பெறுவேன் என முன்பே தெரியும்.
எதிர்பார்த்தபடி சரியான தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் அது கொஞ்சம் கால தாமதமாக வந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர் என்பதால் அவரை நீதிமன்றத்துக்கு அழைப்பதே பெரிய போராட்டமாக இருந்தது. அதிலும் அவருக்கு எதிரான ஆதரங்களை திரட்டியதற்கு பெரும்பாடு பட்டதாக கூறியுள்ளார்,
இந்த வழக்கில் மோடியின் பங்கு குறித்து கேட்டதற்கு, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மோடி செயல்படுவார் என நினைத்தேன் . ஆனால் அவர் தான் இந்த வழக்கில் தலையிடுவது இல்லை, எல்லாம் சட்டபடி நடக்கட்டும் என கூறிவிட்டார். நாட்டில் இப்போது ஊழலுக்கு எதிராக மிக பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.