சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சனிக்கிழமை அன்று நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா. அவருக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் அவர் தனது முதல்வர் பதவி மற்றும் எம்.எல்.ஏ பதவியையும் இழந்தார். எனவே தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி இருந்தது.
நேற்று கூடிய அதிமுக எம்.எல்.ஏ க்கள் ஓ. பன்னீர் செல்வத்தை முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தார்கள். அவர் இன்று தமிழகத்தின் முதல்வராக பதவியேற்று கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்று கொண்டார்கள். அக்ரி கிருஷ்ணமூர்த்தி மட்டும் புதிய அமைச்சர் ஆவார். இந்த பதவியேற்பு ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடந்தது. இதற்கு முக்கிய பிரமுகர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. முதல்வராக பதவியேற்ற பன்னீர்செல்வம் , அப்போது அழுது கொண்டு பதவியற்றார்.
கதறியழுத அமைச்சர் முக்கூர் சுப்ரமணியம்
கண்கலங்கிய அமைச்சர் கோகுல இந்திரா
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.