சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் பெங்களூரில் உள்ள அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கடந்த சனிக்கிழமை அன்று சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இப்போது இருப்பது விஜபி சிறை ஆகும்.
அவர் இருக்கும் அறையில் எல்.சி.டி. டிவி, பிரிட்ஜ், வாஷ் பேசின், மேற்கத்திய டாய்லெட் போன்ற சகல வசதிகளும் உள்ளன. இன்று பன்னீர்செல்வம் பதவியேற்றதை அங்கு இருந்து டிவியில் பார்த்ததாக தகவல்கள் வந்துள்ளன. அவரது அறை முற்றிலும் திரை சீலைகளால் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியில் இருந்து யாரும் அவரை பார்க்க முடியாது. அவருக்கு எப்போது 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதில் என்ன தண்டனை இருக்கிறது என்று தெரியவில்லை. அவர் விஜபி என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து என்பதால் அவருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு தருவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் எதற்காக டிவி, பிரிட்ஜ் போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அவர் தண்டனையை அனுபவிப்பதற்காக தானே அங்கு சென்றுள்ளார் பிறகு எதற்கு சகல வசதிகளுடன் சிறை. இது ஜெயலலிதாவுக்கு மட்டும் அல்ல குற்றங்கள் செய்து விட்டு சிறைக்கு செல்லும் அரசியல்வாதிகள் ஏதோ அது ஒரு கெஸ்ட் ஹவுசை போல அங்கும் சந்தோஷமாக தான் இருக்கிறார்கள். எனவே விஜபி சிறையில் உள்ள வசதிகளில் மாற்றம் வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு உண்மையான தண்டனை வழங்கப்படும்.
அவர் இருக்கும் அறையில் எல்.சி.டி. டிவி, பிரிட்ஜ், வாஷ் பேசின், மேற்கத்திய டாய்லெட் போன்ற சகல வசதிகளும் உள்ளன. இன்று பன்னீர்செல்வம் பதவியேற்றதை அங்கு இருந்து டிவியில் பார்த்ததாக தகவல்கள் வந்துள்ளன. அவரது அறை முற்றிலும் திரை சீலைகளால் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியில் இருந்து யாரும் அவரை பார்க்க முடியாது. அவருக்கு எப்போது 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதில் என்ன தண்டனை இருக்கிறது என்று தெரியவில்லை. அவர் விஜபி என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து என்பதால் அவருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு தருவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் எதற்காக டிவி, பிரிட்ஜ் போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அவர் தண்டனையை அனுபவிப்பதற்காக தானே அங்கு சென்றுள்ளார் பிறகு எதற்கு சகல வசதிகளுடன் சிறை. இது ஜெயலலிதாவுக்கு மட்டும் அல்ல குற்றங்கள் செய்து விட்டு சிறைக்கு செல்லும் அரசியல்வாதிகள் ஏதோ அது ஒரு கெஸ்ட் ஹவுசை போல அங்கும் சந்தோஷமாக தான் இருக்கிறார்கள். எனவே விஜபி சிறையில் உள்ள வசதிகளில் மாற்றம் வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு உண்மையான தண்டனை வழங்கப்படும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.