தமிழக முதல்வர் செல்வி
ஜெ.ஜெயலலிதா தமிழகத்தில் ஜுன் 1 முதல் மின்வெட்டு இருக்காது, மற்றும் தடையில்லா
மின்சாரம் வழங்கபடும் என்றார். இது தமிழக மக்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை
ஏர்படுத்தியது. சுமார் 7 ஆண்டுகளாக மின்வெட்டால் அவதி பட்டு வந்த தமிழக மக்களுக்கு
இது பெரும் சந்தோஷத்தை தரும் செய்தியாக இருந்த்து. மக்களும் ஜுன் 1 வரை காத்து
வந்தனர். ஜுன் 1 வந்த்து, ஆனால் தடையில்லா மின்சாரம் மட்டும் வரவேயில்லை.
அதற்காக மக்கள்
இன்னும் காத்து கொண்டு தான் இருக்கிறார்கள். மின்வெட்டிற்கு முக்கிய காரணம்
பொருப்பில்லாத முந்தைய அரசுகளே. அப்போது 3500 மெகாவாட்டாக இருந்த கூடுதல்
மின்சாரத்தை அம்மா தனது சிறப்பான ஆட்சியின் மூலம் 1000 மெகாவாட்டாக கொண்டு
வந்தார். ஆனால் ஜுன் 1 முதல் மின்வெட்டு இருக்காது என்று அவசரபட்டு சொல்லி
விட்டார். முன்பாவது சொன்ன நேரத்தில் மின்வெட்டு இருக்கும் ,அது தங்களுக்கு
வசதியாக இருக்கும். இப்போது ,எப்போ வருகிறது எப்போ போகிறது என்றே தெரியவில்லை என
மக்கள் பொலம்புகிறார்கள்.
எப்போது அம்மா சொன்ன
ஜுன் 1 வருமோ என காத்து கொண்டு இருக்கிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.