தமிழக அணிக்காக முதன் முதலாக 2001 ஆம் ஆண்டில் பத்ரினாத் விளையாடினார் . கடந்த 14 வருடங்களாக தமிழக அணிக்காக ரஞ்சி மற்றும் பல தொடர்களில் விளையாடி வந்தார் . இந்திய அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளார் . முதல் தர கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்கில் 59.31 சராசரியாக கொண்டுள்ளார் . ஐ.பி.எல் போட்டிகளில் கடந்த சீசன்களில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடி , பல நேரங்களில் தனது அணியை காப்பாற்றியும் உள்ளார் .
அடுத்து நடக்க உள்ள சையது முஸ்தாக் அலி டிராபியில் தமிழக அணிக்கான உத்தேச அணியில் பத்ரினாத் இடம் பெறவில்லை . மேலும் 2014 ஐ.பி.எல் ஏலத்திலும் இவரை யாரும் எடுக்கவில்லை .
இதனால் சோர்வடைந்த இவர் விதர்பா அணிக்கு மாறுவது என முடிவு எடுத்து அதற்கான பணிகளையும் செய்துள்ளார் . 14 வருடங்களாக விளையாடிய அணியை விட்டு , இப்போது விதர்பா அணிக்கு மாறும் முடிவு பலரை வியப்புக்குள்ளாக்கியுள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.