தமிழகத்தில் உள்ள அருவிகள் , வனப் பகுதிகள் , மலைப் பிரதேசங்கள் உள்ளீட்ட இயற்கை வளங்களை பாதுகாக்க தமிழக முதல்வரின் தலைமையில் பாதுகாப்பு ஆணையம் அமைக்க முடிவு செய்துள்ளனர் .
சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்து இழுக்கும் இயற்கை எழில் மிகுந்த இடங்களை புதுப்பித்து , பயணிகளின் வரவை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டுய நடவடிக்கை குறித்து அறியும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது . அந்த ஆய்வுக் கூட்டம் முடிந்ததும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் முதல்வர் .
அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களைக் காணலாம் :
அருவிகள் , வனப் பகுதிகள் , மலைப் பிரதேசங்கள் உள்ளீட்ட இயற்கை வளங்களை பாதுகாக்க தமிழக முதல்வரின் தலைமையில் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும் . இந்த ஆணையத்தைப் பற்றி சட்டமன்ற கூட்டுத் தொடரில் முடிவு எடுக்கப்படும் .
பயணிகள் அதிகம் வரக் கூடிய குற்றால அருவியின் தூய்மையும் , அங்குள்ள வசதிகளும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் .
குற்றாலத்தில் முக்கியப் பகுதிகளில் கேமராக்கள் பொறுத்தப்படும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.