BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 28 June 2014

இயற்கை வளங்களை பாதுகாக்க புதிய திட்டம் அறிவித்தார் தமிழக முதல்வர் !!



தமிழகத்தில் உள்ள அருவிகள் , வனப் பகுதிகள் , மலைப் பிரதேசங்கள் உள்ளீட்ட இயற்கை வளங்களை பாதுகாக்க தமிழக முதல்வரின் தலைமையில் பாதுகாப்பு ஆணையம் அமைக்க முடிவு செய்துள்ளனர் .

சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்து இழுக்கும் இயற்கை எழில் மிகுந்த இடங்களை புதுப்பித்து , பயணிகளின் வரவை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டுய நடவடிக்கை குறித்து அறியும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது . அந்த ஆய்வுக் கூட்டம் முடிந்ததும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் முதல்வர் .

அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களைக் காணலாம் :

அருவிகள் , வனப் பகுதிகள் , மலைப் பிரதேசங்கள் உள்ளீட்ட இயற்கை வளங்களை பாதுகாக்க தமிழக முதல்வரின் தலைமையில் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும் . இந்த ஆணையத்தைப் பற்றி சட்டமன்ற கூட்டுத் தொடரில் முடிவு எடுக்கப்படும் .

பயணிகள் அதிகம் வரக் கூடிய குற்றால அருவியின் தூய்மையும் , அங்குள்ள வசதிகளும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் .

குற்றாலத்தில் முக்கியப் பகுதிகளில் கேமராக்கள் பொறுத்தப்படும் .



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media