பாஜக எம்பி களுக்கு அறிவுரை வழங்கும் கூட்டம் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. அதில் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி கூறப்பட்டது. முதல் நாள் மோடி பங்கேற்று அறிவுரை வழங்கினார். அடுத்த பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்று அறிவுரை வழங்கினர். இதில் அவர்கள் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதலங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்னும் அறிவுரை வழங்கப்பட்டது.
மக்களிடம் தங்கள் கருத்துகளை கொண்டு செல்ல சமூக வலைதலங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்கள். நமது திட்டங்களை அதன் மூலம் தெளிவுபடுத்துங்கள் என்றார் ஆ.எஸ்.எஸ் பொது செயலாளர் சுரெஷ் சோனி. ஆனால் கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை அதில் பதிவு செய்ய கூடாது என்றார். இறுதியாக மூத்த தலைவர் அத்வானி நிரைவுரையாற்றினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.