மோடி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட்டில் இளைஞர்களை கவரும் புதிய திட்டம் வந்து உள்ளது. அதில் ஏ1 மற்றும் ஏ தர ரயில் நிலையங்களில் இலவச வை பை வசதியை அமைத்து தர உள்ளார்கள். இதில் தமிழகத்தில் எந்தெந்த ரயில் நிலையங்கள் அடங்கும் என்கிற அறிவிப்பு உள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 14 ரயில் நிலையங்கள் அடங்கும். அவை,
ஏ1 வசதி கொண்ட ரயில் நிலையங்கள்,
* சென்னை சென்ட்ரல்
* சென்னை எக்மோர்
* கோவை
* மதுரை
ஏ வசதி கொண்ட ரயில் நிலையங்கள்,
* திருச்சி
* நெல்லை
* தூத்துக்குடி
* திண்டுக்கல்
* விழுப்புரம்
* தஞ்சை
* சேலம்
* ஈரோடு
* திருப்பூர்
* மேட்டுப்பாளையம்
இந்த 14 ரயில் நிலையங்களில் இனி இலவச இன்டெர்னெட் வசதி கிடைக்க உள்ளது. செல்போன் , லேப்டாப் வைத்து இருப்பவர்களுக்கு இனி நன்றாக பொழுது போகும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.