மோடி பிரேசிலில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் செல்ல இருக்கிறார் . பிரேசில் செல்லும் வழியில் ஜெர்மணியின் பிராங்க்பிரட் நகரில் ஓய்வு எடுப்பது வழக்கம் . இந்நிலையில் ஏஞ்சலா மெர்கெல் இரவு உணவிற்கு அழைப்பு கொடுத்ததால் பெர்லின் நகரத்திற்கு செல்ல தன் திட்டங்களை மாற்றி அமைத்தார் மோடி .
ஆனால் இப்போது ஜெர்மனி அணி உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளதால் ஏஞ்சலோ மெர்கெல் அங்கு செல்ல உள்ளார். அதுவும் 13 ஆம் தேதி இரவு தான் நடக்க உள்ளது.இதற்கு முன்பு அவர் ஜெர்மனி அணியின் முதல் போட்டியை பார்க்க சென்றார். மோடியா அல்லது கால்பந்தா என்ற இறுதி போட்டியில் அவர் கால்பந்தை தேர்ந்தெடுத்து உள்ளார். மோடியும் இவரை தவிர வேறு யாரையும் சந்திக்க தயாராக இல்லை. இதனால் இந்த சந்திப்பு முற்றிலுமாக கைவிடப்பட்டு உள்ளது.
எனவே கால்பந்து இறுதி போட்டியினால் மோடி புறகணிக்கப்பட்டு விட்டார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.