BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 10 July 2014

மோடி தனது முதல் வாக்குறுதியை நிறைவேற்ற உள்ளார்




நரேந்திர மோடி நம் எல்லோருக்கும் பிரதமர் மட்டும் தான், ஆனால் வாரணாசி மக்களுக்கு பிரதமர் என்பதையும் தாண்டி அந்த தொகுதியின் எம்.பி.யும் கூட. எனவே அந்த தொகுதி மக்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடமையும் மோடியிடம் உள்ளது. அந்த தொகுதி மக்களுக்கு அவர் கொடுத்த முக்கியமான வாக்குறுதி , புனித நதியான கங்கையை சுத்தப்படுதுவது என்பது தான். 

சொன்ன வாக்கு தவறாமல் அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டார். தனது அமைச்சரவை அமைத்த போதே கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கு என தனி துறையை உருவாக்கி உமா பாரதியை அதற்கு அமைச்சராக்கி, அதற்கான நடவடிக்கையிலும் இறங்க சொன்னார். இன்று மோடி அரசின் முதல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கு ரூ.2037 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும் இருந்து இதற்கான நிதியை வாங்க உள்ளார்கள். 

இதோடு விவசாயிகளின் நீண்ட நாள் கனவான நதிகளை இணைக்கும் திட்டத்தை ஆய்வு செய்வதற்கும் மட்டும் 100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media