மோடி அரசின் முதல் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இதில் முன்னால் பிரதமர் வாஜ்பாயின் கனவு திட்டமான நதிகள் இணைப்பு திட்டத்துக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்து உள்ளது. இந்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு காவிரி பிரச்சனை ஏற்பட்ட போது தமிழ் திரையுலக பிரபலங்கள் போராட்டத்தில் இறங்கினர். அதில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , நதிகளை இணைக்க அரசு முன்வந்தால் அதற்கு 1 கோடி தருவதாக கூறினார். இப்போது மத்திய அரசு முன்வந்து உள்ளது. ரஜினி பணம் தருவார் என்று எதிர்பார்க்கலாம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.