ரசிகர்களால் அன்போடு தாதா என அழைக்கப்படும் முன்னால் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இன்று பிறந்த நாள்.இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை தொடங்க இருப்பதால் அந்த போட்டியை வர்ணனைசெய்வதற்காக அவர் இங்கிலாந்து சென்று விட்டார். அதனால் அவரது பிறந்த நாளை அவரது குடும்பத்தினருடன் கொண்டாட முடியவில்லை.
அவர் இன்று ஒரு பேட்டி தந்தார். கங்குலி ஒரு கால்பந்து ரசிகர் என்பது அனைவரும் தெரிந்தது தான். அந்த பேட்டியில் இந்த உலக கோப்பையை வெல்ல போவது யாரு என்ற கேள்விக்கு ,இறுதி போட்டி ஜெர்மனி - நெதர்லாந்து அணிகளுக்கிடையே நடக்கும் என்றார். ஆனால் ஒரு கால்பந்து ரசிகனாக அவர் எதிர்பார்ப்பது அர்ஜெண்டினாவும் - பிரேசிலும் இறுதி போட்டியில் மோத வேண்டும் என்று. இப்போது இருக்கும் ஃபார்மை வைத்து பார்க்கும் போது அது ஜெர்மனி - நெதர்லாந்து இடையே தான் என்றார்.
பொருத்து இருந்து பார்ப்போம் தாதாவின் கணிப்பு மெய்யாகிறதா அல்லது பொய்யாகிறதா என்று.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.