BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 8 July 2014

இன்று முதல் அரையிறுதி போட்டி : ஜெயிக்கபோவது யாரு ??




கால்பந்து உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் மூன்று ஆட்டங்களில் கோப்பையை வெல்ல போவது யார் என்று தெரிந்து விடும். இன்று முதல் அரையிறுதி தொடங்க இருக்கிறது. இதில் பிரேசில் அணியும், ஜெர்மனி அணிகளும் மோத உள்ளன. இருவருமே பலமான அணிகள் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆட்டத்தில் யார் ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று பார்ப்போம்.

கடந்த ஆட்டம் வரை இரு அணிகளுமே சமபலத்துடன் இருந்து வந்தன. ஆனால் கடந்த ஆட்டத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் காயம் காரணமாக விலகி விட்டார். அந்த அணியின் கேப்டன் தியாகோ சில்வா 2 மஞ்சள் அட்டைகளை வாங்கி விட்டதால் இந்த ஆட்டத்தால் பங்கேற்க முடியாது. இது அந்த அணியின் முன்களம் பின்களம் என இரண்டிலும் ஒட்டை விழ வைத்து விட்டது. ஜெர்மனியின் டீம் வொர்க் எல்லா ஆட்டங்களிளும் சிறப்பாக இருந்ததால் இந்த போட்டியில் ஜெர்மனி அணி வெல்வதற்கே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறபடுகிறது. இருந்தாலும் பிரேசில் வெல்வதற்கு சில காரணங்கள் அமைந்து உள்ளது. அவை,

*  பிரேசில்  அணியின் பயிற்சியாளர் ஸ்காலரி தலைமையில் அந்த அணி இதுவரை உலக கோப்பையில் தோற்றது இல்லை.

* இந்த ஆட்டம் பிரேசிலின் சொந்த மண்ணில் நடக்கிறது.

* இதுவரை பிரேசில் அணியின் டீம் வொர்க் நன்றாக வந்து உள்ளது.

* கடந்த 2 உலக கோப்பையிலும் ஜெர்மனி அணி அரையிறுதியில் தோற்று வெளியேறி வருகிறது.


24 ஆண்டுகள் கழித்து உலக கோப்பை வென்று விட வேண்டும் என்று ஜெர்மனி அணியும், கோப்பையை வென்று நெய்மருக்கு தர வேண்டும் என்ற வெறியில் பிரேசில் அணியும் இன்று களமிறங்க உள்ளன.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை காலை 1.30 மணிக்கு தொடங்க உள்ளது.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media