பொதுவாக பலர் அன்றாடம் ஒரு ஆடையை அணிவர். மடிப்பு குலையாதபடி
அவை இருக்க வேண்டும். இதற்காக பேண்ட், சட்டைகள் சலவை செய்து, பிறகு இஸ்திரி
பெட்டி (அயர்ன் பாக்ஸ்) மூலம் நன்றாக தேய்த்து அணிந்து கொள்வர்.இதை
செய்ய சற்று உழைப்பும், பணச்செலவும் தேவைப்படுகிறது. ஆனால், சலவை செய்வது,
அயர்ன் செய்வது போன்ற தொல்லையே இல்லாத ஒரு புதுமையான ஆடையை அமெரிக்க
நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.
இந்த புதுமையான ஆடையை 100 நாட்கள் வரையில் சலவைக்கு போடாமல் அயர்ன் செய்யாமல் தினமும் அணியலாம். துர்நாற்றம், எதுவும் இருக்காது. இதை உயர்ரக கம்பளியை கொண்டு உருவாக்கியுள்ளனர். இந்த சட்டை ஒன்றின் விலை சுமார் ரூபாய் 5 ஆயிரம் (98 டாலர்கள்) ஆகும். இது இளைஞர்களுக்கு ஒரு புதுமையான வரப்பிரசாதமாக இருக்கும்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.