BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 29 June 2014

நூடுல்ஸ்காக ஏற்பட்ட சண்டையில், கொலை செய்து இதயத்தை தின்றார் சைகோ வாலிபர் !!



சீனாவில் உள்ள ஹபே மாகாணத்தை சேர்ந்தவர் யுள் லியோ . இவருக்கு வயது 48 ஆகும் . இவர் அங்கு உள்ள ஒரு கடையில் நூடுல்ஸ் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அவருக்கு பக்கத்தில் போ து ஆன் என்னும் 29 வயது வாலிபரும் சாப்பிட்டு கொண்டு இருந்தார்



 இவர் லியோவிடம் ஒரு நூடுல்ஸ் வாங்கி தருமாறு கேட்டார் . ஆனால் லியோ மறுத்து விட்டார். இதனால் அந்த வாலிபர் ஆத்திரமடைந்தார் . இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. கோபத்தின் உச்சிக்கு சென்ற வாலிபர் கையில் வைத்து இருந்த கத்தியால் லியோவின் குரல் வளையை அறுத்தார். இதனால் அவர் அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது.


ஆனால் அந்த வாலிபருக்கு அதோடு கொபம் நிற்கவில்லை அந்த கத்தியை கொண்டு, அந்த நபரின் மார்பில் கிழித்து இதயத்தை வெளியில் எடுத்து சாப்பிட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் அங்கு வந்த போது அந்த ரத்த காட்டேரி போல் அமர்ந்து இருந்தார். அவரை போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media