BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 29 June 2014

தருமபுரியில் மாற்று சமுதாய தலைவர்களைக் கொலைசெய்ய சதியா? 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது


தருமபுரி மதிகோண்பாளையம் போலீசார், பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக நத்தம் காலனியை சேர்ந்த சங்கர்(36), அதியமான்(30, சந்தோஷ்(17), அசோக்குமார்(30), துரை(50), சக்தி(38) ஆகிய 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2 நாட்டுத்துப்பாக்கி மற்றும் 3 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். இவர்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தின் காளிதாஸ் என்பவரால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் இளவரசன் தற்கொலை செய்து கொண்டு இறந்ததற்கு பழிவாங்குவதற்காக தயாராகிக்கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிகின்றது என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் தருமபுரியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

திவ்யா தன்னை விட்டுவிட்டு பெற்றோருடன் வாழப்போவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு சென்றதையடுத்து சென்ற ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி, ரயில் முன் பாய்ந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்டார். இளவரசன் நினைவு தினத்தை வரும் ஜூலை 4ம் தேதி, அனுசரிக்க பல்வேறு அமைப்பினர் போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனையடுத்து தர்மபுரி தாலுகா பகுதியில் 14 நாட்களுக்கு 144 தடை உத்தரவை கோட்டாட்சியர் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் கலவரம் செய்ய சதிவேலைகளை மேற்கொண்டோரை போலிசார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டுமென்று நத்தம் காலனியை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர், மேலும் தங்களுடைய ரேஷன் கார்டுகளை திரும்ப தந்துவிடுவோம் என்றும் கூறினர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media