சென்னையில் மவுலிபாக்கத்தில் உள்ள ஒரு குடியிருப்பு நேற்று இடிந்து உழுந்தது. அதில் பலர் சிக்கி கொண்டனர், அவர்களை காப்பாற்றுவதற்காக மீட்பு பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது . அந்த இடிபாடுகளிள் சிக்கிய ஒருவர் தனது செல்போன் மூலம் வெளியே தொடர்பு கொண்டு உள்ளார் . தன்னை காப்பாற்றுமாறு கதறி அழுதார். தன்னுடன் 5 நபர்கள் இருக்கிறார்கள் என்றும் ,அவர்கள் இருக்கும் இடம் இருட்டாக இருப்பதாகவும், மூச்சு விடுவதற்கு சிரமமாக இருப்பதாகவும் கூறினார் .விரைந்து வந்து தங்களை காப்பாற்றுமாறு கேட்டு கொண்டார்.
ஆனால் இப்போது அவரை தொடர்பு கொண்ட போது அது அனைத்து வைக்கப்பட்டு உள்ளது என்று வந்தது. அவர்களின் நிலைமை என்னவென்று இன்னும் தெரியவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று இந்த இடத்தை இன்று ஆய்வு செய்து, காப்பாற்றும் பணிகளை விரைவு படுத்தினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.