மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக வும் சிவசேனா கட்சியும் 25 ஆண்டுகளாக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு வந்துள்ளார்கள். அந்த மாநிலத்தின் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக தொகுதி உடன்பாடு நடைபெற்று வந்தது. அதில் இழுபறி நீடித்து கொண்டே இருந்தது. கடந்த தேர்தலை விட இந்த முறை பாஜக அதிக தொகுதிகளை கேட்கிறது. இது தான் பிரச்சனைக்கு காரணம்.
சிவசேனா 150 தொகுதிகளிளும், பாஜக 131 தொகுதிகளிளும் போட்டியிட முடிவு செய்தன. மீதி உள்ள 7 தொகுதிகளை கூட்டணியில் உள்ள 4 கட்சிகளுக்கு ஒதுக்கின. அதில் 3 கட்சிகள் சமாதானம் அடையாததால் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தன. இப்போது தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. அதனால் கூட்டணி நிறைவடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.