மத்திய மனிதவள் மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் ஸ்மிருதி இராணி. இவர் டெல்லியில் உள்ள ஒரு பள்ளிக்கு வருகை புரிந்துள்ளார். அப்போது அங்கு இருந்த துடைப்பத்தை கொண்டு பள்ளியை சுத்தம் செய்தார். சுத்தமான இந்தியா என்னும் இயக்கத்தை பிரபல படுத்துவதற்காக இந்த திட்டத்தை செய்தார். இந்த திட்டத்தில் சேருமாறு எல்லா மக்களையும் அறிவுறுத்தினார். 2019 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை தூய்மையானதாக மாற்ற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
சுதந்திர தின உரையின் போது சுத்தமான இந்தியாவை உருவாக்குவது தனது கனவு என மோடி தெரிவித்து இருந்தார். அதற்காக தான் இந்த திட்டத்தை தொடங்க உள்ளார்கள். இதன் மூலம் இந்தியா ஒரு சிறந்த சுற்றுலா தளமாக மாறும் என மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி அன்று இந்தியா முழுவதும் தொடங்கி வைக்க உள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.