ஐஎன்எஸ் சிந்து ரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி இரண்டு கடற்படை அதிகாரிகள் , 32 வயதான 'லெப்டினென்ட் கமாண்டர்' கபிஷ் முவால் மற்றும் 30 வயதான மனோரஞ்சன் குமார் உயிர் இழந்துள்ளனர்.
முவாலின் சகோதரர் ஆசிஷ் இதுகுறித்துக் கூறுகையில், "எனது சகோதரர் போரில் இறந்திருந்தால் கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் இப்படி உயிரிழந்திருப்பது பெரும் வருத்தமாக உள்ளது. இந்தக் கப்பல் மிகவும் குறைபாடுகளுடன் இருப்பதாக என்னிடம் முவால் பலமுறை கூறியுள்ளார் . எல்லோருக்குமே இது தெரியும். கடைசி முறையாகத்தான் இந்தக் கப்பலை சோதிக்க அனுப்பினர். ஆனால் அது இருவரின் உயிரைப் பறித்து விட்டது." என்று வருத்தத்துடன் கூறினார் .
கப்பலில் இருந்த ஒரு பேட்டரியில் ஏற்பட்ட கசிவுதான் தீவிபத்துக்குக் காரணம் என்கிறார்கள். மேலும் முவால் மற்றும் குமார் ஆகியோர் இருந்த அறைக்குள் தீயை அணைக்க வைத்திருக்கும் தீத்தடுப்பான் கருவியிலிருந்து வெளியான விஷ வாயுவும் அறைக்குள் புகுந்து விட்டதால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீ மற்றும் விஷவாயுவும் பரவியதைத் தொடர்ந்து, முவாலும், குமாரும் தங்களது அறைக்குள் இருந்தவர்களை வேகமாக வெளியே தள்ளிக் காப்பாற்றியுள்ளனர். வேறு யாரும் உள்ளே சிக்கியுள்ளனரா என்றும் பார்த்துள்ளனர். அப்போதுதான் இவர்கள் இருவரும் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
கடற்படை வீரர்களின் உயிர் தியாகத்திற்கு 'சல்யூட்' செய்ய விரும்புவோர்கள், லைக் போடுங்கள்!