டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் டிவிட்டர் கணக்கில் இருந்து "தீபிகா படுக்கோனின் கிளிவேஜ் ஷோ" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒரு கட்டுரைக்கு இணைப்பு கொடுத்திருந்தது, (தற்போது இந்த டிவிட் நீக்கப்பட்டுவிட்டது) இந்த டிவிட்டை பார்த்த தீபிகா படுகோன் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார், "ஆமாம் நான் பெண், அதனால் மார்பகங்கள் இருக்கின்றன, அதனால் கிளிவேஜ் இருக்கிறது, இதனால் உங்களுக்கென்ன பிரச்சினை" என்று டிவிட் செய்தார்,
அதைத்தொடர்ந்து "பெண்ணுக்கு மரியாதை கொடுப்பது எப்படி என்பது தெரியாமல், பெண்ணுரிமை குறித்து பேசாதீர்கள்" என்றும் கூறினார், "இந்தியாவின் முன்னணி நியூஸ் பத்திரிக்கைக்கு இது தான் நியூஸ் ஆ?" என்றும் குறிப்பிட்டுள்ளார், டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற முன்னணி பத்திரிக்கையை கண்டு அச்சப்படாமல் வெளுத்து வாங்கிய தீபிகா படுக்கோனின் செயலை பலரும் பாராட்டியுள்ளார்கள் .
இந்நிலையில் இந்தியாவில் நடக்கும் பொது பிரச்சனை மற்றும் செக்ஸ் குறித்த கட்டுரைகளை எழுதும் சோபா டி, இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இன்றைய உலகில் இது ஒரு சாதாரண விஷயம். இன்று உள்ள கேமராக்களுக்கு எல்லாம் இவை மட்டும் தெரிகிறது. இதனை ஏன் தீபிகா படுகோன் புரிந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை.அவருக்கு நல்ல உடல் உள்ளது. அதனை அவரது ரசிகர்கள் பல்வேறு விதமாக பார்த்து ரசித்துள்ளார்கள். படத்தில் மட்டும் தனது உடலை படு கவர்ச்சியாக காட்டும் தீபிகா இதனை மட்டும் ஏன் எதிர்க்கிறார்.
இது ஒரு முக்கியமான செய்தியா என்று தீபிகா கேட்டுள்ளார். ஆமாம் ஷாருக் கானின் 8 பேக்கை போல இதுவும் முக்கியமானது தான் என்று கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.