பொதுவாக இந்திய பெண்கள் செக்ஸ்சில் அதிக ஈடுபாடு இல்லாதவர்கள், கணவனுக்காக மட்டும் தான் செக்ஸ் உறவு கொள்கிறார்கள், பிள்ளை பேறுக்காக மட்டும் தான் செக்ஸில் ஈடுபடுகிறார்கள் என்று நம்பப்படுவது உண்டு, ஆனால் இந்த நம்பிக்கையெல்லாம் தகர்க்கும் விதமாக சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.
பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான சி. நீல்சன் மற்றும் இந்தியா டுடே இதழ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியப் பெண்கள் செக்ஸ் ஈடுபாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்திய பெண்களின் செக்ஸ் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில் இங்கிலாந்து பெண்களுக்கோ செக்ஸை விட கம்ப்யூட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் மூழ்கி கிடப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக உள்ளார்கள்
இந்திய பெண்களில் 70 சதவீதத்தினர் செக்ஸ் என்பது மிகவும் அவசியமானது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள், புது புது இடங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் செக்ஸ் உறவை அனுபவிக்க விரும்புவதாக 67 சதவீதத்தினர் குறிப்பிட்டுள்ளனர். வெவ்வேறு நிலைகளில் உறவு மேற்கொள்ள வேண்டும் என 20 சதவீதம் பெண்களும், புதிய வகை முன் விளையாட்டுகளில் 24 சதவீதம் பெண்களும் ஆர்வமுடன் உள்ளார்கள்.
57 சதவீத பெண்கள் செக்ஸ் உறவில் மகிழ்ச்சியே முக்கியமானது என்றும் தாங்களும் தங்களது ஜோடியும் இருக்க வேண்டும் என விரும்புவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்திலோ நிலைமை தலை கீழ், செக்ஸ் உறவு கொள்வதை விட விடிய விடிய கம்யூட்டர் கேம்ஸ் ஆடுவதிலும் ஃபேஸ்புக், டிவிட்டரில் நேரம் செலவிடுவதையுமே பெண்கள் விடும்புகின்றனர்விரும்புவதாக தெரிவித்துள்ளனர் இங்கிலாந்து பெண்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.