BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 16 September 2014

ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக சுப்பிரமணியன் சுவாமி மீது அவதூறு வழக்கு பதிவு செய்த தமிழக முதல்வர் !!



டிவிட்டரில் தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதாக சுப்பிரமணியன் சுவாமி மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார் .

கடந்த வெள்ளிக் கிழமை அன்று சமூக வலை தளமான டிவிட்டரில் சுப்பிரமணியன் சுவாமி தமிழக அரசு தீலிபனின் நினைவு தினத்தை அனுசரிக்க அனுமதி அளித்ததை டிவிட்டரில் பதிவு செய்து இருந்தார் . இதனையடுத்து முதல்வருக்கு எதிராக அவதுறாக செய்தி பரப்புவதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது .

அவர் போட்ட அந்த பதிவு 181 தடவை ரிடிவிட் செய்யப்பட்டு இருந்தது . மேலும் சுப்பிரமணியன் சுவாமி மீது முதல்வர் இந்த வாரத்தில் பதிவு செய்யும் மூன்றாவது அவதூறு வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media