BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 16 September 2014

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு மீண்டும் ஒத்தி வைப்பு


19 ஆண்டுகளாக நடந்து வந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் நேற்று விடுதலைப்புலிகளாலும் காவிரி முல்லைப்பெரியாறு பிரச்சினைகளாலும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தீர்ப்பு வழங்கும் இடத்தை பரப்பன அக்ரஹாரத்துக்கு மாற்ற வேண்டும் என்று முதல்வர் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் செப்டம்பர் 20ம் தேதி வழங்க வேண்டிய தீர்ப்பை 27ம் தேதிக்கு மாற்றி இடத்தையும் மாற்றி உத்தரவிட்டுள்ளார்கள், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

# தீர்ப்பா? வரும் ஆனா வராது!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media