BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 16 September 2014

ஓய்ந்தது மோடி அலை, இடைத்தேர்தலில் பல இடங்களில் தோல்வியை தழுவிய பாஜக‌


நூறு நாளில் சலித்து போன மோடி மோகம், ஏற்கனவே வெற்றிபெற்ற பல இடங்களை இந்த இடைத்தேர்தலில் இழந்தது பாஜக நாடு முழுதும் நடைபெற்ற 32 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காலையில் இருந்தே பாஜக பல இடங்களில் பி தங்கியிருந்தது. கடைசியாக கிடைத்த முடிவுகளின் படி பாஜக தான் ஏற்கனவே வெற்றிபெற்றிருந்த 13 தொகுதிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேசத்தில் பெரும் வெற்றி பெற்றிருந்த பாஜக தற்போது 7 இடங்களை இழந்து வெறும் 3 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. குஜராத்திலும் இதற்கு முன்பு வெற்றி பெற்றிருந்த 3 இடங்களை காங்கிரசிடம் இழந்துள்ளது.

ஆளுங்கட்சியாக உள்ள ராஜஸ்தானில் கூட 75% இடங்களை காங்கிரசிடம் இழந்துள்ளது பாஜக, அசைக்க முடியாத குஜராத்திலும் 3 இடங்களை இழந்துள்ளது.


இது மோடியின் மீதான மோகம் நூறு நாளில் மக்களுக்கு சலித்துப்போனதையே காட்டுகிறது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் எழுதுங்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media