ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மிக பெரிய வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதில் சுமார் 1.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வெள்ளத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் பெர்வேஸ் ரசூல் மாட்டி கொண்டு இருந்தார் என்பது தெரியவந்துள்ளது. இந்திய அணிக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து விளையாடிய முதல் வீரர் என்னும் பெருமயை பெற்று இருந்தார். இவரது வீட்டுக்கு வெள்ளம் வந்த போது இவர் முதல் காரியமாக தனது கிரிக்கெட் பைகளை பத்திரப்படுத்தி உள்ளார். தரைதளம் முழுவதும் தண்ணீராக இருந்ததால் 11 நாட்கள் முதல் தளத்தில் இருந்து உள்ளார்கள். அங்கே எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தது. இப்போது தான் அங்கு தொலைதொடர்பு நெட்வொர்க் கிடைக்க தொடங்கி உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.