BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 16 September 2014

தன்னுடைய கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கும்படி தனது ரசிகர்களை கேட்டுக் கொண்ட கங்குலி !!



முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி தனது கால்பந்து அணியான அத்லெடிகோ டி கொல்கத்தா அணிக்கு ஆதரவு அளிக்கும் படி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார் .

வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி இந்திய கால்பந்து லீக்கான ஐ.எஸ்.எல் தொடங்க உள்ளது . அந்த லீக்கில் அத்லெடிகோ டி கொல்கத்தா என்னும் அணியை கங்குலி வாங்கியுள்ளார் . அவர் கால்பந்தை விட்டு விட்டு கிரிக்கெட் ஆட வந்தார் . ஆனால் இன்னும் தன்னிடம் திறமை குறையவில்லை என்பதை மைதானத்தில் மூன்று கோல்கள் அடித்து நிருபீத்தார் . அவர் முயற்சி செய்த 5 ஷாட்களில் மூன்றை கோல் ஆக்கினார் .

அப்போது அவர் அளித்த பேட்டியில் , " நீங்கள் ஈஸ்ட் பெங்காள் , மோகன் பகான் உள்ளீட்ட கிளப்களின் போட்டிக்கு அதிக அளவில் திரண்டு வருவீர்கள் . அது போல அத்லெடிகோ டி கொல்கத்தா அணிக்கும் உங்கள் ஆதரவை அளியுங்கள் . போட்டிக்கு வாருங்கள் , ஒரு நல்ல கால்பந்து போட்டியை நீங்கள் பார்க்கலாம் . எல்லா அணியும் சமமாகவே இருக்கிறது . ஐ.பி.எல் போட்டிகள் போன்று இதுவும் வெற்றி பெறும் " என்று எதிர்பார்ப்பதாக கூறினார் .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media