BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 30 June 2014

தனி மனிதனாக 70 இந்தியர்களை ஈராக்கில் இருந்து மீட்ட பஞ்சாப் எம்.பி !!



பஞ்சாபில் பிரபல காமெடியனாக இருப்பவர் பக்வாண்ட் மண் . இவர் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்டு சங்க்ரூர்  தொகுதியில் வெற்றி பெற்றார் .

ஈராக்கில் உள்ள இந்தியர்களை காப்பாற்ற மத்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்நிலையில் , இவர் தன்னால் என்ன செய்ய முடியும் அவர்களுக்கு என யோசித்து கொண்டு இருந்தார் . இதனால் அங்குள்ள சில இந்தியர்களிடம் இவரால் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொள்ள முடிந்தது . அவர்கள் இவருக்கு அந்த இடத்தில் இருந்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பினர் . அந்த வீடியோவில் அவர்கள் ஆபத்தில் இருப்பதாகவும் , அவர்கள் வீட்டிற்கு வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர் .

இது குறித்து பக்வாண்ட் கூறுகையில் , " இளைஞர்கள் பலர் தங்கள் நிலம் , நகைகள் ஆகியவற்றை அடகு வைத்து ஈராக் சென்றுள்ளனர் . அங்குள்ளவர்களில் பாதி பேர் இங்கு வர முடியாத சூழ்நிலையில் உள்ளனர் . ஏனென்றால் அவர்களிடம் கடனை அடைக்க பணம் இல்லை .

பல இளைஞர்கள் காண்ட்ராக்டர்களிடம் சிக்கி உள்ளனர் . அந்த காண்ட்ராக்டர்கள் அவர்களுக்கு சம்பள்த்தை வாங்கி வைத்து கொள்வது மட்டுமில்லாமல் அவர்களின் பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துள்ளார் . பாஸ்போர்ட்டை திருப்பி கொடுக்க பணம் செலுத்த வேண்டும் என மிரட்டி வருகிறார் " என்றார்

இவர் இரண்டு நிறுவனங்களின் உதவியுடன் அந்த காண்ட்ராக்டர்களின் பணத் தேவையை அடைத்துள்ளார் . மேலும் அங்கே உள்ள 70 இந்தியர்களுக்கு இந்தியா வர டிக்கெட் அனுப்பி வைத்துள்ளார் .

இவரின் முயற்சியால் இதுவரை 10 பேர் இந்தியா வந்துள்ளனர் . மற்றவர்களும் கூடிய விரைவில் வந்து சேருவர் என நம்பிக்கை தெரிவித்தார் .

எங்கள் பையன்களை அனுப்பி சி.பி.எம் பெண்களை கற்பழிப்போம் - நாடாளுமன்ற உறுப்பினரின் திமிர் பேச்சு !!


மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் டபாஸ் பால் . இவர் ஒரு பிரபல பெங்காலி நடிகர் .

லோக்கல் சேனல் ஒன்றில் வெளியிட்ட வீடியோவில் இவர் , " தேவைப்பட்டால்  எங்கள் பையன்களை அனுப்பி சி.பி.எம் கட்சி பெண்களை கற்பழிப்போம் " என்று கூறியது பதிவு செய்யப்பட்டுள்ளது . மேலும் கட்சி தொண்டர்களிடம் மற்ற கட்சியை மிரட்டியும் கூறியுள்ளார் .

இவரின் இந்த கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக வெளியிட்ட அறிக்கையில் அவரின் கருத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அவரிடம் இருந்து தூரப்படுத்தி கொண்டது .  ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதைப் பற்றி கட்சி தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை .

இவர் மேற்கு வங்களத்தின் கிரிஷ்ணா நாகர் தொகுதியில் இருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இவரின் பேச்சு மிகவும் கண்டனத்துக்குரியது ..

வருகிறது முதல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி !!


கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் பகலிரவு டெஸ்ட் போட்டி வர காத்து இருக்கிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவுக்கும் நியுஸிலாந்துக்கும் இடையே நடக்க வாய்ப்பு இருக்கிறது . சமீபத்தில் ஐசிசி கூட்டம் நடந்தது ,இதில் கலந்த கொண்ட ஆஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து அணிகளின் கிரிக்கெட் வாரிய தலைவர்கள் இது குறித்து ஆலோசித்தார்கள். அவர்கள் இந்த போட்டியை அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தும் முடிவில் இருக்கிறார்கள். இந்த போட்டிகளில் 'பிங்க்' நிற பந்தை பயன் படுத்த உள்ளார்கள்.




பகலிரவு போட்டிகளை நடத்த ஐசிசி அமைப்பு 2012 ஆம் ஆண்டே அனுமதி அளித்து விட்டது. இந்த போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

சென்னையில் 3 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் : அக்டோபரில் வருகிறது !!


சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சுமார் 45 கிமீ ற்கு இந்த சேவையை தர இருக்கிறார்கள். முதல் கட்டமாக கோயம்பேடு ஆலந்துர் இடையே 10 கிமீ தூரத்திற்கு இதனை அறிமுக படுத்துகிறார்கள். இது அக்டோபர் இறுதியில் வர இருக்கிறது. இதற்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசல் நேரத்தில் மூன்று நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்க திட்டமிட்டு உள்ளதால் , அதன் தண்டவாளங்கள் தரமானவையாக இருக்க வேண்டும். இதனை செய்யும் பணி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இவை 1.435 இடைவேளி கொண்ட தண்டவாளங்கள். 



ஒரு மீட்டர் தூரத்திற்கான தணடவாளத்தின் எடை 52 கிலோ இருக்கும் ,ஆனால் இவை 60 கிலோ ஆகும். இரட்டை பாதையில் 230 கிமீ நீளத்திற்கு தண்டவாளங்கள் அமைக்கபட உள்ளது .60 கிமீ நீளத்திற்கு தேவையான தண்டவாளங்கள் வந்து விட்டது.மற்றதை விட இதன் விலை 20 சதவீதம் அதிகம் ஆகும் , ஆயுள் காலமும் இரு மடங்கு அதிகம் ஆகும்.

மெட்ரோ வந்த பிறகாவது டிராபிக் குறைகிறதா என்று பார்ப்போம்.

மோடியிடம் மன்னிப்பு கேட்டாரா ஆமிர் கான் ??


மோடியை கடந்த 23 ஆம் தேதி அன்று சந்தித்தார் பாலிவுட் நடிகர், அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்கள். ஆனால் மோடியை சந்தித்த போது அவரிடம் ஆமிர் கான் மன்னிப்பு கேட்டாரா என்று விஷ்வ ஹிந்து பரிஷித் கேள்வி கேட்டுள்ளது.இதனை அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அசோக் சவுக்லே கேட்டு உள்ளார்.



குஜராத்தில் நடந்த சம்பவத்திற்கு மோடி தான் காரணம் என்று ஆமிர் கான் வெளிபடையாக கூறி இருந்தார். இதனை மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு கூறி இருந்தார் . ஆனால் மோடி இப்போது பிரதமர் ஆகி விட்டதால் தனது கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டாரா இல்லையா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.


காதலிக்காக 24 இலட்சம் ரூபாய்க்கு சினிமா டிக்கெட் வாங்கிய வாலிபர் : காதல் வெறியால் வாழ்வில் உயர்ந்தார் !!


சீன நாட்டில் இருவர் 2007 இல் காதலித்து  வந்தனர், எல்லா காதலையும் போல அவர்கள் காதலிலும் சிறு பிரச்சனை வந்தது அதனால் அவர்கள் இருவரும்  பிரிந்து விட்டார்கள். ஒரு நாள் காதலி தன்னை சினிமாவுக்கு அழைத்து செல்லுமாறு கூறினாள் . ஆனால் அந்த காதலனிடம் அதற்கான பணம் இல்லாததால் அவன் முடியாது என்று கூறி விட்டான். இதனால்  அவர்கள் காதல் பிரிந்து விட்டது. இதில் அந்த வாலிபர் மிகவும் மனமுடைந்து விட்டார். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற வெறியில் இருந்தார்.




 அதற்காக கடந்த 7 ஆண்டுகளாக உழைத்து வந்தார். அதற்கான பலனும் கிடைத்தது. இப்போது வாழ்வில் நல்ல நிலைமைக்கு வந்து விட்டார். அதனும் அரின் காதலிக்கு தீரிவிக்கும் விதமாக இப்போது வந்து உள்ள டிரான்ஸ்பார்மர்ஸ் திரைபடத்தின் ஒரு காட்சிக்கான அனைது டிக்கெட்டுகளையும் ஐமேக்ஸ் திரையரங்கில் வாங்கி விட்டார் . இதன் மதிப்பு 24 இலட்சம் ஆகும் . இது அவரது மாத சம்பளத்தில் பாதி ஆகும். இவரின் காதல் உண்மையானது ஆகும், ஆனால் அவரது காதலியுடையது உண்மையான இல்லை, என்வே அவரை மறந்து விடுவதே நல்லது ஆகும்.

பேஸ்புக் டிவிட்டரை அதிகம் பயன்படுத்துங்கள் எம்பிகளே : பாஜக அறிவுரை !!


பாஜக எம்பி களுக்கு அறிவுரை வழங்கும் கூட்டம் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. அதில் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி கூறப்பட்டது. முதல் நாள் மோடி பங்கேற்று அறிவுரை வழங்கினார். அடுத்த பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்று அறிவுரை வழங்கினர். இதில் அவர்கள் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதலங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்னும் அறிவுரை வழங்கப்பட்டது.



மக்களிடம் தங்கள் கருத்துகளை கொண்டு செல்ல சமூக வலைதலங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்கள். நமது திட்டங்களை அதன் மூலம் தெளிவுபடுத்துங்கள் என்றார் ஆ.எஸ்.எஸ் பொது செயலாளர் சுரெஷ் சோனி. ஆனால் கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை அதில் பதிவு செய்ய கூடாது என்றார். இறுதியாக மூத்த தலைவர் அத்வானி நிரைவுரையாற்றினார்.

சுதந்திர தினத்தன்று வருகிறது அஞ்சான் படம் : விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் டீசர் வெளியீடு !!


சூர்யா தற்போது நடித்து வரும் படம் அஞ்சான். இதில் சமந்தா ,வித்யூத் உள்ளிட்ட பலர் நடிகிறார்கள். இந்த படத்தை லிங்குசாமி இயக்குகிறார்.
இந்த படம் எப்போது வரும் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள். இப்போது இது குறித்து தகவல்கள் வந்து உள்ளன. இந்த படத்தின் டீசர் ஜுலை 5 ஆம் தேதி நடக்கும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் வெளியிடுகிறார்கள். ஜுலை 17 ஆம் தேதி படத்தின் இசை வெளியிட்டு விழா பிராமாண்டமாக நடக்க இருக்கிறது. படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வர இருக்கிறது. அன்று சுதந்திர தினம் என்பதால் விடுமுறை ஆகும் .



இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் அனைத்தும் அனைவரையும் கவரும்படி இருந்தது. பல ரசிகர்கள் இதனை பாராட்டினார்கள். இந்த படத்தின் டிரெய்லரை பார்த்த ஆர்யா அதனை வெகுவாக பாராட்டினார். சூர்யாவுக்கு இந்த படம் மீண்டும் ஒரு திருப்புமுனையாக மாறலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.




கீழே விழுந்தது போல நடித்ததற்கு மன்னிப்பு கேட்ட நெதர்லாந்து அணி வீரர் !!


உலக கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றில் நெதர்லாந்து மெக்ஃஸிகோ அணிகள் மோதினர் . தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெக்சிகோ அணி முதல் கோலை அடித்தது . இதனால் மெக்சிகோ அணி அடுத்த சுற்றிற்கு தகுதி பெறும் என்று அனைவரும் நினைத்த நிலையில் 87 வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி கோல் போட்டது . அடுத்து சிறிது நேரத்தில் நெதர்லாந்து அணி வீரர் ராபன் பந்தை எடுத்துக் கொண்டு ஓடும் போது , மெக்சிகோ அணி வீரர் ராபேல் மார்க்யுஸ் காலை நீட்ட ராபன் பறந்து விழுந்தார்  ( நடித்தார் ) . இதையடுத்து நெதர்லாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது . அதை கோலாக மாற்றினார் ஹண்டிலார் . இதன் மூலம் மெக்சிகோ அணி உலக கோப்பையில் இருந்து விலகியது .

நடுவரின் இந்த முடிவு பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது . அனைவரும் ராபனின் நடிப்பை சுட்டிக்காட்டி குறை கூறுகின்றனர் .


இதுகுறித்து ராபன் கூறுகையில் , " அம்பயரின் அந்த பெனால்டி முடிவு சரியானதே . அவர் என்னை தட்டிவிட்டார் . அந்த பெனால்டியை நடுவர் சரியாக தான் கொடுத்தார் . ஆனால் போட்டியின் முதல் பாதியில் நான் பெனால்டி வாங்க வேண்டும் என்று வேண்டுமென்றே நடித்தேன் , அதற்காக நான் இப்போது மனம் வருந்துகிறேன் . நான் அவ்வாறு செய்து இருக்க கூடாது " என்றார் .

இடிந்து விழுந்த கட்டிடத்தை பற்றி நீங்கள் அறியாத செய்திகள் : வீடு வாங்கியோர் நிலை என்ன ??




நேற்று  முன்தினம் போரூரில் உள்ள ஒரு 11 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. இதனால் அந்த இடம் முழுவதும் சேதமானது. அந்த குடியிருப்பின் பெயர் டிரஸ்ட் ஹைட் ஆகும். இங்கு கடந்த ஆண்டே அனைத்து வீடுகளும் விற்று தீர்ந்து விட்டன. புது வீட்டில் குடி போகலாம் என வீடு வாங்கியோர் காத்து கொண்டு இருந்தனர் ,ஆனால் எதிர்ப்பாராதவிதமாக இவ்வாறு நடந்து விட்டது. அங்கு ஒவ்வொரு மாடியிலும் நான்கு வீடுகள் உள்ளன .அவை 2 படுக்கையறை வசதி கொண்டது. சுமார் 975 முதல் 1115 சதுர அடிகள் வரை இருக்கும் ஒவ்வொரு வீடுகளின் அளவும் .அதன் மதிப்பு ரூபாய் 51 இலட்சம் முதல் 59 இலட்சம் வரை இருக்கும்.



வீடு வாங்கியோர் தங்களது பணத்தை திரும்ப தர வேண்டும் என்கிற கோரிக்கை வைத்து உள்ளனர். கட்டுமான நிறுவனம் தரப்பில் விரைவில் இந்த பிரச்சனை தீர்க்க படும் என்றனர். அந்த கட்டுமான நிறுவனங்கள் கட்டிடம் கட்ட ஆரம்பித்த நாள் முதல் முடியும் வரை இயற்கை சீற்றம், விபத்து ஆகியவற்றுக்காக காப்பீடு செய்து இருக்க வேண்டும் . ஆனால் அது பற்றிய தகவல் எதும் தரவில்லை.

சென்னை போரூர் அடுக்கு மாடி விபத்து , ஆந்திரா முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார் !!


சென்னை போரூரில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததை அடுத்து , சம்பவம் நடந்த இடத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று நேரில் பார்த்தார் . இந்த விபத்தில் பலியானவர்களில் சிலர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் .

இதனையடுத்து ஏற்கனவே நெல்லூர் இணை ஆட்சியர் தலைமையில் ஒரு குழு இங்கே வந்து மீட்பு பணியை வந்து கண்காணித்தனர் . இப்போது முதல்வரே நேராக இடத்துக்கு வந்துள்ளார் .

விபத்தில் பலியான ஆந்திர தொழிலாளிகளின் குடும்பத்துக்கு 5 லட்சமும் , காயம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு 50 ஆயிரமும் உதவித்தொகையாக கொடுக்க உள்ளதாக முதல்வர் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார் .

கால்பந்து உலக கோப்பையில் இனி 30 வது நிமிடத்திற்கு பிறகு ஒரு இடைவேளி : புதிய விதிமுறை !!



கால்பந்து போட்டிகளிள் எப்போதும் ஒரு இடைவேளி தான் இருக்கும் . அது முதல் 45 நிமிடங்கள் முடிந்த பிறகு இருக்கும் . ஆனால் இந்த உலக கோப்பையில் புதிய விதிமுறை வந்து உள்ளது. அதாவது போட்டியின் போது 32 டிகிரி வெப்பம் இருந்தால், ஆட்டத்தின் முதல் பாதியிலும் இரண்டாவது பாதியிலும் 30 வது நிமிடத்திற்கு பிறகு ஒரு இடைவேளி விட வேண்டும். அது வீரர்கள் நீர் அருந்துவதற்கு விடப்படும் இடைவேளி ஆகும்.



இந்த இடைவேளி கட்டாயம் இருக்க வேண்டும் என்று பிரேசில் நீதிமன்றம் பிபா அமைப்பிற்கு கட்டளையிட்டு உள்ளது. இதனை மீறினால் தண்டனை கடுமையாக இருக்கும் என்றார்கள். அவ்வாறு விடவில்லை என்றால் 90910 $ அபராதமாக கட்ட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு ரமலான் வாழ்த்து சொன்னார் பிரதமர் மோடி !!



முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடும் ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்குகிறது . அதற்கு வாழ்த்து தெரிவித்து மோடி தனது டிவிட்டர் இணையதளத்தில் ஒரு பதிவு செய்தார். ரமலான் நோன்பை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் . இந்த புனிதமான வேளையில் அனைவரின்  வாழ்கையில் இன்பமும் ,சந்தோஷமும் வரட்டும் என்றார்.


விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி - 23 !!



இந்தியாவின் இஸ்ரோ வெற்றிகரமாக தன்னுடைய பி.எஸ்.எல்.வி சி - 23 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது . இந்த ராக்கெட்டில் 5 வின்களங்கள் உள்ளது .

இன்று காலை 9:52 மணிக்கு ராக்கெட் விண்ணை நோக்கி பாய்ந்தது . இந்த ராக்கெட் 44.44 மீட்டர் உயரும் 230 டன் எடையும் கொண்டதாக இருக்கிறது . ராக்கெட் ஏவுதளம் சென்னையில் இருந்து 80 கீமீ தூரத்தில் உள்ளது .

இந்த ராக்கெட்டில் உள்ள முக்கிய விண்களம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்பாட் - 7 என்னும் விண்களம் . இது 714 கிலோ எடை கொண்டது . மேலும் ஜெர்மணியின் ஐசாட் (14 கிலோ) , கனடாவின் என்எல்எஸ்7.1 மற்றும் என்எல்எஸ்7.2 , சிங்கப்பூரின் 7 கிலோ எடை கொண்ட வெளாஸ் ஆகிய விண்களங்களை தூக்கிச் சென்றுள்ளது .

இது புதிதாக அரசு பொறுப்பேற்ற பின் இந்தியா அனுப்பும் முதல் ராக்கெட் . ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரில் பார்த்து விஞ்ஞானிகளுக்கு பாராட்டை தெரிவித்தார் .

இதுவரை  பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 35 வெளிநாட்டு விண்கள
ங்களை விண்ணில் செலுத்தியுள்ளது .

நைஜீரியாவில் போக்கோ ஹாரம் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் !!



மேற்கத்திய கல்வி முறைகளை நைஜீரியாவில் அமல்படுத்துவதை எதிர்த்து போக்கோ ஹாரம் அமைப்பினர் போராடி வருகின்றனர் . அவர்கள் 200 சிறுமியரை கடத்திச் சென்றுள்ளனர் .

இப்போது இந்த தீவிரவாத அமைப்பினர் மேலும் ஒரு தாக்குதலை நடத்தினர் . அவர்கள் கிறிஸ்தவ மத கோவில்களை குறி வைத்து தாக்குதல் நடத்தினர் . இது போன்று மூன்று கிராமங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் .

வாகனத்தில் வந்த தீவிரவாதிகள் , கோவிலை குறி வைத்து குண்டு வீசினர் . மேலும் பல கட்டிடங்களை தீயிட்டு கொழுத்தினர் . கோவிலில் இருந்து வெளி வந்து கொண்டு இருந்த மக்களை துப்பாக்கியினால் சுட்டனர் .

இந்த தாக்குதலில் 12 பேர் இறந்துள்ளனர் . 

மீண்டும் டில்லியில் கவனம் செலுத்த போகிறார் அரவிந் கெஜ்ரிவால் !!


மக்களவர் தேர்தலில் நாடு முழுவதும் பல தொகுதிகளில் நின்று பலத்த அடி வாங்கியது ஆம் ஆத்மி கட்சி , இப்போது சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி ஹரியானா மற்றும் மஹாரஷ்ட்ராவில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது .

ஆனால் இதை அந்த கட்சியின் தலைவர் மறுத்தார் . நேற்று டில்லியில் தொண்டர்களுடன் நடந்த கூட்டத்தில் இதை தெரிவித்தார் . மேலும் அவர் கூறுகையில் நம்முடைய பலம் அனைத்தையும் டில்லியில் பயன்படுத்த வேண்டும் என்றார் .

இந்த முடிவு குறித்து தொண்டர்களின் கருத்தை கேட்ட பின் தனது இறுதி முடிவை கட்சி தெரிவிக்கும் என தெரிகிறது .

Sunday, 29 June 2014

கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!



இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடமும் ஒரு கற்பழிப்பு நடந்து வருவதாக ஒரு சோகமான தகவல் இருக்கிறது . கற்பழிப்பு நடந்த பின் தான் அது அனைவருக்கும் தெரிந்து , பின் நடவடிக்க எடுக்க நீண்ட காலம் ஆகும் . அவ்வாறு நடவடிக்கை எடுப்பதற்குள் அந்த பெண் ஒவ்வொரு நொடியும் நரக வேதனையை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள் . இதனை தடுப்பதற்கு அந்த கற்பழிப்பு நடக்கும் முன்னரே தடுத்து நிறுத்த வேண்டும் .



இவ்வாறு கற்பழிப்பு நடக்காமல் தடுக்க ஒரு ஆடையை வாரணாசியைச் சேர்ந்த தீக்ஷா பதக் 21 மற்றும் அஞ்சலி ஸ்ரீவஸ்தவா 23 இருவரும் இணைந்து உருவாக்கி உள்ளனர் .



இந்த ஆடையில் ஒரு சிறிய பட்டன் இருக்கும் . அந்த பட்டனை அழுத்தினால் அருகில் உள்ள அனைத்து காவல் நிலையம் அனைத்திற்கும் தகவல் அனுப்பப்படும் . அந்த ஆடையில் உள்ள இடத்தைக் கண்டறியும் ஜி.பி.எஸ் மூலம் காவல்துறையினர் அந்த பெண்ணின் இடத்தைக் கண்டறிய முடியும் . இப்போதைக்கு அந்த பட்டனின் தகவல் வாரணாசியில் உள்ள 200 காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த பட்டன் முக்கிய உறவினர்களுக்கு எஸ்.ஓ.எஸ் மெசெஜ் அனுப்பும் வகையிலும் வடிவமைத்துள்ளனர் .



மேலும் வாரணாசியை சேர்ந்த இரண்டு மாணவிகள் கற்பழிப்பை தடுக்க செருப்பு ஒன்றை வடிவமைத்துள்ளனர் . இந்த செருப்பு பாலியல் வன்முறை செய்ய நெருங்குபவனுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் , மேலும் உறவினர்களுக்கு தகவலும் கொடுக்கப்படும் .



இடிபாடுகளில் சிக்கியவர் செல்போனில் அழைத்து பேசினார் : காப்பாற்றுமாறு கதறினார் !!


சென்னையில் மவுலிபாக்கத்தில் உள்ள ஒரு குடியிருப்பு நேற்று இடிந்து உழுந்தது. அதில் பலர் சிக்கி கொண்டனர், அவர்களை காப்பாற்றுவதற்காக மீட்பு பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது . அந்த இடிபாடுகளிள் சிக்கிய ஒருவர் தனது செல்போன்  மூலம் வெளியே தொடர்பு கொண்டு உள்ளார் . தன்னை காப்பாற்றுமாறு கதறி அழுதார். தன்னுடன் 5 நபர்கள் இருக்கிறார்கள் என்றும் ,அவர்கள் இருக்கும் இடம் இருட்டாக இருப்பதாகவும், மூச்சு விடுவதற்கு சிரமமாக இருப்பதாகவும் கூறினார் .விரைந்து வந்து தங்களை காப்பாற்றுமாறு கேட்டு கொண்டார்.



ஆனால் இப்போது அவரை தொடர்பு கொண்ட போது அது அனைத்து வைக்கப்பட்டு உள்ளது என்று வந்தது. அவர்களின் நிலைமை என்னவென்று இன்னும் தெரியவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று இந்த இடத்தை இன்று ஆய்வு செய்து, காப்பாற்றும் பணிகளை விரைவு படுத்தினார்.

ரிசர்வ் வங்கியின் பெயரிலேயே மோசடி!

இன்று எனக்கு வந்த ஈமெயில் வழக்கமான நீங்கள் 4 கோடி லாட்டரி ஜெயிச்சுட்டீங்க என ஆரம்பித்து சுமார் 15 ஆயிரம் கட்டணத்தை 2 நாளில் அனுப்ப சொல்லி அக்கறையுடன் மெயில் அனுப்பியிருந்தனர். இது வழக்கம்தான்.ஆனால் இதில் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா வின் லோகோ, அட்ரஸ், ரிசர்வ் வங்கியின் இப்போதைய கவர்னர் பெயர், போட்டோவெல்லாம் போட்டு அனுப்பியிருக்கின்றனர். அமெச்சூர் போட்டோசாப் வேலையாய் இருந்தாலும் இது ரொம்ப சீரியஸான குற்றமாய் வளர்ந்துகொண்டிருக்கிறது. அடுத்தகட்டமாய் ரிசர்வ் பேங்க் வைப்சைட் போலவே ஒரு மிர்ரர் சைட் ரெடி பண்ணி, அதில் லிங்க் கொடுத்து இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாய் அனுப்பினால் ஏராளமானோர் ஏமாற வாய்ப்பிருக்கிறது. 

சைபர் க்ரைம் டிபார்ட்மெண்டால் இவர்களை ஒன்றுமே செய்ய முடியாதா??? 
via Mohamed A.K. Jailani www.fb.com/mjailani



இடிந்து விழுந்த கட்டிடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார் தமிழக முதல்வர் !!


சென்னை போரூர் முகலிவாக்கம் கட்டிடம் நேற்று இடிந்து விழுந்து தரைமட்டமானது . கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 12 பேர் பலியாயினர் .

சம்பவம் நடந்த இடத்தை தமிழக் முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை நேரில் சென்று ஆய்வு செய்தார் . மீட்பு பணிகளை பற்றி முதல்வர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் . கட்டிடம் எவ்வாறு இடிந்தது என்றும் , அங்கே உள்ள பிரச்சினைகள் பற்றியும் கேட்டறிந்தார் .

இதன் பின் பத்திரிக்கையாளர்களிடம் அளித்த பேட்டியில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாகவும் , மீட்பு பணிகள் தொடர்ந்து நடப்பதாகவும் , காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் , விபத்து நடக்கும் போது கட்டிடத்தில் 72 பேர் இருந்தனர்  அவர்களில் 20 பேர் பெண்கள் எனவும் , காயம் அடைந்தவர்களின் உறவினர்களுக்கு தங்க இடமும் உணவும் அளித்து வருவதாகவும் , கட்டிடல் கட்டுவதில் தான் விதிமீறல் நடந்து உள்ளதாகவும் , அனுமதி கொடுப்பதில் விதிமீறல் நடக்கவில்லை எனவும் அரசு அனைத்து நடவடிக்கைளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார் .

சிக்னலில் காரை நிறுத்தாமல் சென்ற இளைஞர்,17 பிரிவுகளில் வழக்கு : இது தப்பாச்சே இளைஞர்களே !!




பெங்களுர் போலீசார் வாகன சோதனையில் இருந்தனர். அப்போது அங்கு  இருந்த ஒரு சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டு இருந்தது, ஆனால் அதனை மதிக்காமல் ஒரு கார் வேகமாக சென்றது. அதனை போலீசார் பின் தொடர்ந்து சென்றார்கள். சுமார் 4 கிமீ பிறகு அந்த காரை மடக்கி பிடித்தார்கள். அதனை ஒட்டியவர் 17 வயது மிக்க ஒரு கல்லூரி மாணவர். அவரிடம் ஒட்டுனர் உரிமம் இல்லை . வண்டியை சிக்னலில் நிறுத்தாமல் ஒட்டியது, ஒட்டுநர் உரிமம் இல்லாதது என 17 பிரிவுகளிள் வழக்கு பதிவு செய்யபட்டது.



இது மிகவும் தவறான செயல் ஆகும், அதுவும் ஒரு இளைஞர் இதனை செய்தார் என்னும் போது நாம் இதற்காக வெட்கப்பட வேண்டும். நாளைய இந்திய இளைஞர்களை நம்பி என்று அப்துல் கலாம் கனவு காண்கிறார். ஆனால் நமது இளைஞர் சமுதாயமோ மிகவும் தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை, சினிமா அவர்களை தவறான பாதையில் எடுத்து செல்கிறது. இது தப்பாச்சே இளைஞர்களே ,சீக்கிரம் மாற்றி கொள்ளுங்கள்.

உலக தமிழ்ச் சங்கத்தின் இணையதளத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் !!!



1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி  மதுரை தமிழ்ச் சங்கம் மதுரையில் தொடங்கப்பட்டது . 14.5 ஏக்கர் நிலபரப்பில் மதுரை தமிழ்ச் சங்கம் தல்லாகுளத்தில் உள்ளது . இதன் செயல்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது .

இதன் செயல்பாடுகள் குறித்து உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் அறிந்து கொள்ள உலக தமிழ்ச் சங்கத்தை 4 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட இணையதளத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார் .

இந்த இணையதளத்துக்கான இணைப்பு  www.ulagatamilsangam.org 

மோடி சென்னை வந்தார் : ஜெயலலிதாவை சந்தித்தார் !!





ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை பிஎஸ்எல்வி ராக்கெட் 5 செயற்கைகோள்களுடன் நாளை விண்ணிற்கு செல்கிறது . இதனை பார்ப்பதற்காக நமது நாட்டின் பிரதமர் மோடி வருகிறார். அதற்காக சிறப்பு விமானம் மூலம் இன்று மாலை சென்னை வந்தார் . அவரை தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் ரோசையா ஆகியோர் நேரில் சென்று பார்த்து சிறப்பு வரவேற்பு கொடுத்தனர். இவர்களுடன் பாஜக நிர்வாகிகளும் இருந்தனர் . பிரதமராக பதவி ஏற்ற பின் மோடி முதல் முறையாக சென்னை மண்ணில் கால் வைத்து உள்ளார் என்பது குறிபிடத்தக்கது .

முகலிவாக்கம் இடிந்த கட்டிடம்! விடிய விடிய மீட்புப்பணி, காவல் அதிகாரியின் உருக்கமான பதிவு


ஆவடி சிவா அவர்கள் T3 கொரட்டூர் காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் வேலை செய்கிறார், முகலிவாக்கம் இடிந்த கட்டிடத்தில் விடிய விடிய மீட்பு பணியில் பங்கெடுத்துள்ளார், அப்போது  நடந்த உருக்கமான சம்பவங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விவரித்துள்ளார்

மாவட்ட ஆட்சியர்கள் , பல உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை, தீயணைப்புப் துறை சகோதரர்கள், பேரிடர் மீட்பு குழு நண்பர்கள், மெட்ரோ ரயில் ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம்! விடிய விடிய ஒரு ஆள் கூட அங்கிருந்து நகரவில்லை! இரவு 23 பேர் வரை காப்பாற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்! அரசு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்தது!

நள்ளிரவு 3 மணிக்கு பெயர் தெரியாத ஒருவர் 50 பிஸ்கெட் பாக்கெட்களை கொண்டு வந்து எங்கள் பசியாற்றினார்! இன்னொருவர் சைக்கிளில் டீ விற்பனை செய்பவர்களை மொத்த பேரயும் அழைத்து வந்து அனைவருக்கும் டீ வாங்கிந்தந்தார்! சிக்னலில் பிச்சை எடுக்கும் பெரியவர் கடைசி வரை அவரால் முடிந்ததை அப்புறப்படுத்தி கொண்டிருந்தார். ஒருவருக்கு கூட உறக்கம் என்ற பேச்சே வரவில்லை விடியும் வரை! எல்லாரயும் காப்பாத்திடனும்னு எல்லாருக்குமே வெறி! கண்டிப்பாக காப்பாற்றி விடுவோம்! இரவு பணி முடித்து நாங்கள் வந்துவிட்டோம்!

இன்னும் என் சகோதரர்கள் அங்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்! அனைவரையும் காப்பாற்றி விடு இறைவா ! மிகுந்த களைப்போடு உறங்க செல்கிறேன்! வணக்கம்! என்னவோ இதெல்லாம் உங்ககிட்ட சொல்லனும்னு தோணுச்சி அதான்!

Avadi Shiva சார்க்கு ஒரு சல்யூட்

மீட்பு பணி குழுக்கு ஒரு லைக் போட்டு இவர்களின் சிறப்பு அனைவரையும் சென்று சேர ஷேர் செய்வோம்

உலக கோப்பை கால்பந்தை தவிர்த்து விம்பிள்டன்னிற்கு வந்த சச்சின்,பெக்காம் !!




இப்போது உலகம் முழுவதும் அனைவராளும் பார்க்கப்பட்டு , பேசப்பட்டு வருவது கால்பந்து உலக கோப்பை ஆகும். அனைத்து பிரபலங்களும் , விளையாட்டு  வீரர்களும் இதனை கண்டு களித்து வருகிறார்கள். இதனால் மற்ற விளையாட்டுகளுக்கு மவுசு குறைந்து விட்டது. இந்தியவிற்கும் இங்கிலாந்துக்கும் எதிரான டெஸ்ட் தொடர் என்கிற எதிர்பார்ப்பே இல்லாமல் இருக்கிறார்கள் இந்திய ரசிகர்கள். இப்போது விம்பிள்டன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இதனை தீவிர டென்னிஸ் ரசிகர்கள் மட்டுமே கவனித்து வருகிறார்கள்.



ஆனால் நமது சச்சின் கால்பந்தை விரும்பாமல் டென்னிஸை பார்க்க சென்று உள்ளார். அவர் பெடரரின் தீவிர ரசிகர் ஆவார். இவருடன் கால்பந்தின் கதாநாயகன் டேவிட் பெக்காமும் சென்று இருந்தார் . இது டென்னிஸ் வீரர்களுக்கு உற்சாகமூட்டுவதாக இருந்தது. ஸ்டராஸ், பிராட் போன்ற பிரபலங்களும் வந்து இருந்தனர் .என்ன தான் நாம் கால்பந்து உலக கோப்பை, விம்பிள்டன் என் இரண்டையும் கவனித்து வந்தாலும் நாம் மற்ற அணி வீரர்களை ஆதரிக்கும் நிலையில் தான் இருக்கிறோம் என்பதை வெட்கத்துடன் சொல்கிறேன்.

இன்று நடந்து முடிந்தது "டிடி"யின் திருமணம் !!




முதலில் டிவி தொடர்களில் நடித்து பின்பு விஜய் டிவியில் தொகுப்பாளராக மாறியவர் திவ்யதர்ஷனி. இவரை அனைவரும் செல்லமாக டிடி என்று அழைப்பார்கள் . டிடி. என்றால் இவர் தான்   நாம்  அனைவருக்கும் ஞரபகம் வரும். இவர் விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக இருந்தார். இவரது திருமணம்  எப்போது என்று தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். அவரது நண்பர் ஸ்ரீகாந்த் உடனான காதலை ஒப்பு கொண்டார்.



பின்பு பெற்றோர் சம்மதத்துடன் அவரது திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமணம் அவர்களது குடும்ப வழக்கப்படி நடந்தது . இதற்கு விஜய் டி வி பட்டாளமே வந்தது. தனது பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்த டிடிக்கு நம்முடைய திருமண வாழ்த்துக்கள். 

நூடுல்ஸ்காக ஏற்பட்ட சண்டையில், கொலை செய்து இதயத்தை தின்றார் சைகோ வாலிபர் !!



சீனாவில் உள்ள ஹபே மாகாணத்தை சேர்ந்தவர் யுள் லியோ . இவருக்கு வயது 48 ஆகும் . இவர் அங்கு உள்ள ஒரு கடையில் நூடுல்ஸ் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அவருக்கு பக்கத்தில் போ து ஆன் என்னும் 29 வயது வாலிபரும் சாப்பிட்டு கொண்டு இருந்தார்



 இவர் லியோவிடம் ஒரு நூடுல்ஸ் வாங்கி தருமாறு கேட்டார் . ஆனால் லியோ மறுத்து விட்டார். இதனால் அந்த வாலிபர் ஆத்திரமடைந்தார் . இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. கோபத்தின் உச்சிக்கு சென்ற வாலிபர் கையில் வைத்து இருந்த கத்தியால் லியோவின் குரல் வளையை அறுத்தார். இதனால் அவர் அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது.


ஆனால் அந்த வாலிபருக்கு அதோடு கொபம் நிற்கவில்லை அந்த கத்தியை கொண்டு, அந்த நபரின் மார்பில் கிழித்து இதயத்தை வெளியில் எடுத்து சாப்பிட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் அங்கு வந்த போது அந்த ரத்த காட்டேரி போல் அமர்ந்து இருந்தார். அவரை போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர்.

தோனியின் கோரிக்கையை ஏற்று அணிக்கு திரும்புகிறார் டிராவிட் : வெற்றி பெறுமா இந்தியா ??




தற்போது உள்ள இந்திய அணியில் தோனி ,கம்பீரை தவிர மூத்த வீரர் என்று சொல்லி கொள்ளும் படி யாரும் இல்லை . இதனால் இந்திய அணி வெளிநாடுகளில் தடுமாறி வருகிறது. இந்த இளம் வீரர்களுக்கு மூத்த வீரர்களின் அலோசனை தேவை என்பதை உண்ர்ந்து இருக்கிறார் தோனி. எனவே முன்னாள் இந்திய அணி வீரர் டிராவிட்டை அலோசகராக்க வேண்டும் என்று டோனியும் ,இந்திய அணியின் பயிற்சியாளர் ஃப்ளட்சரும் பிசிசிஐக்கு கோரிக்கை வைது இருந்தனர்.




அவர்களது இதனை ஏற்று டிரவிட்டை அணுகினர். சற்றும் யோசிக்காத டிராவிட் இதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் அவரை அதிகாரபூர்வ ஆலோசகராக நியமிக்கபடவில்லை என்றது பிசிசிஐ .டிராவிட்டும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் அணி வீரர்களை சந்தித்து அலோசனை வழங்குவார். இந்திய அணியின் சுவராக விளங்கிய டிராவிட் அணிக்கு அலோசனை வழங்குவது என்பது இந்திய அணியை பலபடுத்தும். ஏனவே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

சீனாவின் வரைபடத்துக்கு மத்திய அரசு கண்டனம் !!



சீனா அரசு வெளியிட்ட வரைபடத்தில் சீனாவின் ஒரு பகுதியாக அருணாச்சல பிரதேசம் குறிக்கப்பட்டு இருந்தது .

சீனாவின் இந்த செய்லுக்கு இந்திய அரசு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது . இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் , " வரைபடத்தை மாற்றி அமைத்தால் அது உண்மை ஆகிவிடாது . அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் விட்டுக் கொடுக்க முடியாத பகுதி . சீன அரசு அதிகாரிகளுடன் இது பற்றி தெரிவித்துள்ளோம் . சீனா சென்றுள்ள இந்திய துணை பிரதமர் ஹமீது அன்சாரி தலைமையிலான அதிகாரிகள் இது குறித்து பேசுவர் " என்று தெரிவித்தனர் .

அருணாச்சல பிரதேசத்தின் முதல்வரும் சீனாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தார் .

இந்தியா ஒலிம்பிக்கில் ஜொலிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு !!!



இன்னும் 2 வருடத்தில் ஒலிம்பிக் போட்டிகள் வர உள்ளது . இந்தியா இதுவரை ஒலிம்பிக்கில் பெரிய அளவு  சாதித்தாது இல்லை . இது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நமக்கு பெரும் அவமானமாகவே இருக்கிறது . எனவே பெரும்பாலான மக்கள் புதிய அரசு இந்த பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு கொண்டு வருமா என்று எதிர்பார்த்து காத்து இருந்தனர் . அது போலவே இப்போது ஒரு தீர்வு கிடைத்துள்ளது .

அந்த தீர்வின்படி மத்திய விளையாட்டு அமைச்சரவை ,  ஒலிம்பிக் போட்டியில் வெல்லும் அளவு திறமை வாய்ந்த வீரர்களை கண்டறிய நிபுணர் குழு ஒன்றை அமைத்து செயல்பட உள்ளனர் .

இந்த குழுவில் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிர் அவர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . அவரும் இந்த முயற்சியில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார் . ராகுல் காந்தி தலைவராக இருப்பாரா என்ற கேள்விக்கு பதில் அளிக்கவில்லை .

பிரபல விளையாட்டு வீரர்களும் , இந்திய ஒலிம்பிக் ஆணைய்த்தில் இருந்த அதிகாரிகளும் இந்த குழுவில் இருப்பார்கள் . இவ்வாறு பிரபல விளையாட்டு வீரர்களை குழுவில் இணைப்பதன் மூலம் இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட் வீரர்கள் சரியான வீரர்கள் ஆகத் தான் இருப்பார்கள் என்னும் நம்பிக்கை மக்களிடேயே வரும் என்று மத்திய அமைச்சகம் நம்புகிறது .


ராஜ் தாக்கரே எதிர்த்து போட்டியிட தயார், நடிகை ராக்கி ஷாவண்ட் ஆவேசம் !!



நடந்து முடிந்த மக்களவை தேர்தல் துவங்கும் முன் ராஷ்ட்ரிய ஆம் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து அந்த கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டார் . ஆனால் அவரால் வெறும் 1,995 ஓட்டுக்களையே பெற முடிந்தது . இதனால் அந்த கட்சியை கலைத்தார் .

இப்போது ராம்தாஸ் அதாவலே தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சியில் இணைந்தார் . இப்போது ராக்கி ஷாவண்ட் அந்த கட்சியின் மாநில மகளிர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் .

அப்போது ராக்கி ஷாவண்ட் கூறுகையில் , " நான் யாருக்கும் பயப்படவில்லை , ராஜ் தாக்கரே எதிர்த்து போட்டியிட அழைத்தாலும் நான் மறுக்காமல் போட்டியிடுவேன் ,அதாவலே ஜி , இதை சொல்வதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் !! நான் வருங்காலத்தில் கண்டிப்பாக முதல்வராக வருவேன் " என்றார் .

ராக்கெட் விண்ணில் பாய்வதை காண மோடி வருகிறார் !!


நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் பி.எஸ்.எல்.வி சி-23 விண்ணில் ஏவப்படுவதை பார்வையிட மோடி நாளை ஸ்ரீஹரிகோட்டா வருகிறார் . இதனால் மோடி வருகின்ற விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்படுத்தியுள்ளனர் .

டில்லியில் இருந்து விமானத்தில் வரும் பிரதமர் , அங்கே அவருக்கு பயணம் செய்யும் விதமாக 4 ஹெலிகாப்டர்கள் தயார் செய்யப் பட்டுள்ளனர் .அந்த ஹெலிகாப்டர் மூலம் ஏவுதளம் செல்கிறார் .

 பி.எஸ்.எல்.வி சி-23  ராக்கெட் சதிஷ் தவான் விண் நிலையத்தில் இருந்து ஏவப்படுகிறது . இந்த ராக்கெட்டில் பிரான்ஸ் , சிங்கப்பூர் , ஜெர்மணி , கனடா ஆகியோரின் விண்களங்கள் உள்ளன .

சர்வதேச மணற் சிற்ப போட்டியில் அசத்திய இந்திய கலைஞர் !!!!


சர்வதேச அளவிலான மணற்சிற்ப போட்டி கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்றது . இந்த போட்டியில் பலவேறு நாடுகளைச் சேர்ந்த 20 கலைஞர்கள் பங்கேற்றனர் . இந்தியாவின் சார்பில் ஓரிசாவில் இருந்து 37 வயதான சுதர்சன் பட்நாயக் கலந்து கொண்டார் .

இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் 10 டண் மணல் கொண்டு 30 மணி நேரத்தில் சிற்பத்தை வடிவமைக்க வேண்டும் . இந்த போட்டியின் தனி நபர் பிரிவில் , " மரம் காப்போம் , எதிர்காலத்தைக் காப்போம் " என்ற தலைப்பில் அவர் வடிவமைத்த சிற்பம் மக்களைக் கவர்ந்ததால் , பெரும்பாலான மக்கள் அவருக்கு வாக்களித்தனர் . இதனால் ஒற்றையர் பிரிவில் அவர் வென்றார் . இரட்டையர் பிரிவில் 5ஆம் இடம் பிடித்தார் .

இவருக்கு இந்திய அரசு இந்தாண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது . 

தருமபுரியில் மாற்று சமுதாய தலைவர்களைக் கொலைசெய்ய சதியா? 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது


தருமபுரி மதிகோண்பாளையம் போலீசார், பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக நத்தம் காலனியை சேர்ந்த சங்கர்(36), அதியமான்(30, சந்தோஷ்(17), அசோக்குமார்(30), துரை(50), சக்தி(38) ஆகிய 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2 நாட்டுத்துப்பாக்கி மற்றும் 3 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். இவர்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தின் காளிதாஸ் என்பவரால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் இளவரசன் தற்கொலை செய்து கொண்டு இறந்ததற்கு பழிவாங்குவதற்காக தயாராகிக்கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிகின்றது என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் தருமபுரியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

திவ்யா தன்னை விட்டுவிட்டு பெற்றோருடன் வாழப்போவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு சென்றதையடுத்து சென்ற ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி, ரயில் முன் பாய்ந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்டார். இளவரசன் நினைவு தினத்தை வரும் ஜூலை 4ம் தேதி, அனுசரிக்க பல்வேறு அமைப்பினர் போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனையடுத்து தர்மபுரி தாலுகா பகுதியில் 14 நாட்களுக்கு 144 தடை உத்தரவை கோட்டாட்சியர் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் கலவரம் செய்ய சதிவேலைகளை மேற்கொண்டோரை போலிசார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டுமென்று நத்தம் காலனியை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர், மேலும் தங்களுடைய ரேஷன் கார்டுகளை திரும்ப தந்துவிடுவோம் என்றும் கூறினர்.

அருகில் இருக்கும் கட்டிடமும் ஆட்டம், மீட்பு பணியில் தாமதம்

அருகில் இருக்கும் கட்டிடமும் ஆட்டம், சென்னை போரூர் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த மீட்பு பணியில் தாமதம்

அருகில் இருக்கும் இன்னொரு கட்டடமும் லேசாக சாய்ந்து இருக்கிறது ஒரு பக்கம். JCB வைத்து எடுக்க முயற்சி செய்தால் ஆட்டம் காணுகிறது இந்தக் கட்டிடமும் . அதன் காரணமாக power driller பயன்படுத்தி உடைக்க முயற்சி .

மேல உள்ள ஆறு அடுக்குகள் உற்றுப் பார்த்தல் தெரியும்

களத்திலிருந்து
முரளிகிருட்டிணன் சின்னதுரை
TNTV SBNN News Services
இளையோர் களம்

முரளிகிருட்டிணன் சின்னதுரை அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்து செய்தி

இது தொடர்பான முந்தைய செய்தியை படிக்க கீழ்கண்ட லிங்கை அழுத்தவும்

சென்னையில் 13 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் பலி, ரமணா படத்தில் வருவது போல நடந்த சம்பவம்

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கழிவறையில் தங்கும் நோயாளிகள்


நாட்டின் தலைநகர் டில்லியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை எய்ம்ஸ் மருத்துவமனை. டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகளவிலான நோயாளிகள் காரணமாக மருத்துவமனை தற்போது திணறி வருகிறது. இந்நிலையில், கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டில்லியில் கடும் பனி நிலவுகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி, புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் உ.பி., மாநிலம் புலந்தர்ஷார் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு இதுவரை மருத்துவமனையில் படுக்கை வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் இரு கண்களையும் இழந்த அந்த சிறுவன் தனது தந்தையுடன் தினமும் இரவு அருகிலுள்ள கழிவறை ஒன்றில் தங்கி வருகிறான்.

இவர்கள் மட்டுமின்றி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் பெரும்பாலானோர் கழிவறையிலேயே தங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தங்குவது மட்டுமின்றி, சமைப்பதும் கூட அங்கு தான். தற்போது கடும் குளிர் காரணமாக வீடிழந்தோரும் கழிவறைகளை நோக்கி வருவதால், அங்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கழிவறையில் படுக்க இடம் கிடைத்ததே என்று நிம்மதியாக உறங்கும் அந்த குடும்பத்தை பாருங்கள் ,தனக்கு இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்து போராட வேண்டும் என்ற எண்ணம் வராமல் ,குறைந்த பட்சம் இந்த வசதி கிடைத்ததே என நினைக்கும் படி மக்களை வைத்து உள்ளது ,இந்திய அரசு

via @Alps Ac Basha at Facebook

எவ்வளவு வேதனை? இந்தியா வல்லரசாக வேண்டும், நோயாளிகளை கழிவறையில் தங்கும் அளவிற்கு இல்லாமல் நல்ல படுக்கையில் படுக்க வைக்கும் அரசாகவாவது இருக்க வேண்டாமா?

Saturday, 28 June 2014

சென்னையில் 13 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் பலி, ரமணா படத்தில் வருவது போல நடந்த சம்பவம்

சென்னையில் 13 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் பலி

காலையில் டில்லியில் மூன்றடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து பலியாகினர் அந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் சென்னையை அடுத்த போரூரில் உள்ள மெள‌லிவாக்கத்தில் 13 மாடி கட்டிடம் இன்று மாலை  சுமார் 5 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிடம் இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை, கீழ்தளங்களில் வேலை முடிவடைந்ததால் பலரும் சமீபத்தில் தான் இதில் குடியேறினார்கள்

இதுவரை இருவர் பலியாகியதாகவும் 5 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது, இன்னும் 30 பேருக்கும் மேல் இடிபாடுகளில் சிக்கியிருப்பார்கள் என தெரியவந்துள்ளது, இவர்களை மீட்கும் பணி மும்மரமாக நடைபெறுகிறது.

இக்கட்டிடத்தில் அடித்தளம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் ஒரு நாள் மழைக்கே தாங்காமல் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இதை மறுத்துள்ள கட்டுமான நிறுவனம் இடி தாக்கியதால் நடந்த விபத்து என்று கூறியுள்ளது.

ரமணா படத்தில் ஏரி இருந்த இடத்தில் பலமற்ற மண் இருக்கும் இடத்தில் கட்டிடங்கள் கட்டி அது இடிந்து விழுவது போன்ற காட்சியமைப்பு இங்கே உண்மையாகியுள்ளது, இப்படத்தில் வருவதை போல இந்த கட்டிடம் போரூர் ஏரி இருந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மண் இக்கட்டிடத்தை தாங்கும் அளவு பலமின்றி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த கட்டிடத்தை கட்டி வரும் பிரைம் சிருஷ்டி நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன் மற்றும் அவரது மகன் முத்து ஆகியோர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏரியில் 13 மாடி கட்டிடம், எங்கே அரசாங்க விதிமுறைகள்? இது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்டில் எழுதுங்கள்

சொத்து குவிப்பு வழக்கு அம்மாவுக்கு சாதகமாக இருக்காது , அதனால தேர்தல் முன் கூட்டியே வரும் , சொல்லுகிறார் தமிழருவி மணியன் !!


காந்திய மக்கள் இயக்கத்தின் இளைஞரணி அலுவலக திறப்பு விழா நேற்று இரவு நடந்தது . அந்த திறப்பு விழாவில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அவர்களும் கலந்து கொண்டார் .

அவர் அளித்த பேட்டியில் , " கர்நாடக நீதிமன்ற வழக்கில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வருக்கு தீர்ப்பு சாதகமாக இருக்காது . இதனால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்த காலத்தை விட முன் கூட்டியே வர வாய்ப்புள்ளது . அப்படி வந்தால் கோவை மாவட்டத்தில் காந்திய மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிடும் " என்றார் .













































தேர்தலில் ஏன் தோத்துப் போனோம் ??? ஆராயப் போகிறார் வைகோ !!



நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பல கட்சிகளுக்கு பலத்த அடி கிடைத்தது . தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டது பாஜக கட்சி . ஆனால் அந்த கட்சியுடன் தமிழகத்தில் கூட்டணி வைத்து இருந்த தேமுதிக மற்றும் மதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டியிட்ட ஒரு தொகுதியிலிலும் ஜெயிக்கவில்லை . இதில் தேமுதிக 14 தொகுதியிலும் , மதிமுக 7 தொகுதியிலும் போட்டியிட்டது .

இந்த தோல்வியினால் மனமுடைந்த விஜய்காந்த் மீண்டும் கட்சிக்கு வலுவூட்ட தனது தோல்விக்கான காரணத்தை தனக்கு தோல்வியை தந்த தொண்டர்களிடம் கேட்டறிந்து கொள்ள முயன்றுள்ளார் .

இப்போது இவரை தொடர்ந்து மதிமுக தலைவர் வைகோவும் ஜூலை 3 ஆம் தேது மூலம் தொண்டர்களிடம் தோல்விக்கான காரணத்தை கேட்டறியும் முயற்சியில் இறங்கப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

இங்கிலாந்து தொடர் எங்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் - தோனி மனம் திறந்து போட்டி !!


இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது . இந்த பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் , 5 ஒரு நாள் போட்டிகளிலும் ஒரு 20-20 போட்டியிலும் இந்தியா கலந்து கொள்ள இருக்கிறது .

இந்த தொடர் குறித்து இந்திய கேப்டன் தோனி கூறுகையில் , " திறமைவாய்ந்த வீரர்களின் திறமையை ஒரு தொடரை வைத்துக் கொண்டு மதிப்பிடக் கூடாது . எங்களுக்கு இந்த தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் . அவர்களின் சொந்த கிரவுண்டில் விளையாடுவதால் அவர்களை சமாளிப்பது கடினம் . நீண்ட காலம் கழித்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி விளையாடுகிறோம் . அதனால் எங்களுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும் என்றார் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media