BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 30 September 2013

தற்போது சினிமாவில் வரும் காமெடிகளை பார்த்தால் சுகர், பிரஸர் எல்லாம் கூடி விடுகிறது - வடிவேலுவின் வாய்க்கொழுப்பு.



2011 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்துக்கும் தனக்கும் உள்ள பார்க்கிங் பிரச்சினையை கணக்கு தீர்த்துக்கொள்வதாக நினைத்து திமுகவுடன் இணைந்து அதிமுக-விஜயகாந்த் கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார், பிரச்சாரத்தில் விஜயகாந்த்தை படு மோசமாக விமர்சித்தார்.

விஸ்வரூபம்-2, இந்தியாவுல முடியலேன்னா அமெரிக்காவுல ரிலீஸ் பண்ணுவேன்: திரும்பவும் ஆரம்பிக்கும் கமலஹாசன்



தியேட்டரில் ரிலீஸாகும் ஒருநாளைக்கு முன்பாகவே டி.டி.ஹெச்சுகளில் ரிலீஸ் செய்யப்போனதால் கமலின் ‘விஸ்வரூபம்’ படத்துக்கு வந்த சிக்கல் எல்லோரும் அறிந்தது தான்.

மீண்டும் அணியில் இடம் பிடித்தார் யுவராஜ் சிங்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 7 ஒரு நாள் மற்றும் 1 டி20 போட்டியில் இந்தியா விளையாடுகிறது. அதற்காக இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. 

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு யுவராஜ் சிங் சேர்க்கப்பட்டு உள்ளார். வீரேந்திர ஷேவாக், கெளதம் கம்பீர், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு இடமில்லை. 

அறிவிக்கப்பட்ட அணி : டோணி, ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, வினய் குமார், அமித் மிஸ்ரா, அம்பட்டி ராயுடு, முகம்மது சமி, ஜெயதேவ் உனக்தத்.

கால்நடைத் தீவின வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி

கால்நடைத் தீவின வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. 

அக்டோபர் 3ம் தேதி இவர் மீதான தண்டனை விபரங்கள் அறிவிக்கப் படும். அதன் பின்னர் அவரது எம்பி பதவி உடனடியாக பறிபோகும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

கால்நடைத் தீவின வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வந்தததால் லாலு பிரசாத் யாதவ் கைது செய்யப்பட்டு பிஸ்ரா முண்டா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப் பட்டார். 

இவரைப் போல இந்தியா முழுவதிலும் மொத்தம் 162 எம்.பி.க்கள் 1258 எம்.எல்.ஏ.க்கள் என 1420 பேர் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், நல அபகரிப்பு, லஞ்சம் போன்ற குற்றவழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். 

இவர்கள் தொடர்பான வழக்கு மீதான தீர்ப்புகள் அடுத்தடுத்து வர உள்ளன. லல்லுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் 64 சதவீத எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்கில் உள்ளனர்.

மேலும் லல்லு பிரசாத் யாதவ்க்கு அளிக்கபப்ட்ட இசட் ப்ளஸ் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

உயிருடன் இருக்கும் அமைச்சருக்கு இறப்பு சான்றிதழ் வழங்க ஊழியர்கள் நடத்திய‌நாடகம்?

உயிருடன் இருக்கும் அமைச்சருக்கு இறப்பு சான்றிதழ் வழங்க ஊழியர்கள் நடத்திய‌நாடகம்?

லஞ்சம் வாங்குவதற்கு தடையாக இருந்ததால் ஆன்லைன் சான்றிதழ் வழங்குவதை முடக்க சதியா?

Sunday, 29 September 2013

எல்லா செயல்பாடுகளுக்கும் ‘பிலிம் சேம்பர்’ தான் பொறுப்பு : நூற்றாண்டு விழா ‘அவமானங்கள்’ குறித்து தமிழக அரசு கைவிரிப்பு

சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் சென்னையில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் மூத்த கலைஞர்கள் பலரும் விழாவுக்கு அழைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டனர். மேலும் விழா குறித்து தி.மு.க தலைவர் கருணாநிதியும் தன் பங்குக்கு தமிழக அரசை கடுமையாக சாடியிருந்தார்.

தமிழக அரசின் சார்பில் செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் உடன் கூட்டணி ஓகே தான் - திருமாவளவன் அறிவிப்பு



ஈழத்தில் போர் உச்சகட்டத்தில் இருந்த போது தமிழகமெங்கும் காங்கிரஸ்சை ஒழிப்பதே என் முதல்பணி என்று சுற்றி சுற்றி பேசி வந்த திருமாவளவன்

சோனியா கும்பலுக்காக பாவமூட்டை சுமந்து அவமானப்படுத்தப்பட்ட மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் - வைகோ

மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும், 9½ ஆண்டுகளாக சோனியா காந்தியும், அவரது கூட்டமும் செய்த பாவங்களை சுமந்ததற்கு தான் இந்த அவமானமா - வைகோ குமுறல்

இன்று பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டதாவது

செம்மொழி மாநாட்டில் ஊழல்? அதிகாரிகளை போட்டுக்கொடுக்கும் திமுக தலைவர் கருணாநிதி


தனக்கு தானே கேள்வி-பதில் திட்டத்தில் இன்று செம்மொழி மாநாட்டு ஊழல் பற்றி குறிப்பிட்ட திமுக தலைவர் கருணாநிதி


கேள்வி:- கோவையில் நடந்த, செம்மொழி மாநாட்டுக்காக செய்யப்பட்ட செலவில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, யாரோ ஒருவர் தாக்கல் செய்த வழக்கின் மீது உங்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது என்று இரண்டொரு ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

என்ற தன் கேள்விக்கு

இதுபோல அரசு நடத்தும் மாநாட்டிற்கான செலவினை முதலமைச்சரோ, அமைச்சர்களோ, உறுப்பினர்களோ கையிலே வைத்துக்கொண்டு செலவு செய்வதில்லை.

அதிகாரிகள்தான் செலவு செய்வார்கள். மாநாடு நடைபெற்ற நேரத்தில் நிதித்துறை செயலாளராக யார் இருந்தாரோ அவர்தான் தற்போதும் செயலாளராக இருக் கிறார். மாநாடு நடைபெற்றபோது கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்து செயல் பட்டவர் தற்போது நிதித்துறையிலேதான் பணியாற்றுகிறார். இந்த செம்மொழி மாநாட்டிற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தனி அதிகாரி யாகவே நியமிக்கப்பட்டார். இந்த மாநாட்டிற்காக செலவு செய்யப்பட்ட தொகை குறித்து அப்போது மாநாட்டை நடத்தும் பொறுப்பை மேற் கொண்டவர்களுக்கு எந்தத் தொடர்பாவது இருந்ததா என்பதை இந்த மூத்த அதிகாரிகள் இடத்திலும், அவர்கள் கையாண்ட கோப்புகளை பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.

என்று அதிகாரிகளை போட்டுக்கொடுத்துள்ளார்.

காதலன் குடிப்பழக்கத்தை கைவிட வைக்க உயிரை விட்ட காதலி

காதல் இவர்களை மெண்டல் ஆக்குகிறதா? மெண்டல்கள் காதலிக்கிறார்களா? என்றே தெரியவில்லை.

பாஜக கூட்டணியில் இணைகிறதா மதிமுக? வைகோவை காவி துண்டு போட்டுக்கொள்ள சொல்லும் அ.மார்க்ஸ்

பாஜக கூட்டணியில் இணைகிறதா மதிமுக? வைகோவை காவி துண்டு போட்டுக்கொள்ள சொல்லும் அ.மார்க்ஸ்

தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பு கிடையாது! - மீண்டும் சவுண்ட் விட்ட பாரதிராஜா



Saturday, 28 September 2013

மன்மோகன்சிங்குக்கு ஏதேனும் சுயமரியாதை இருந்தால் அவர் பதவி விலக வேண்டும் - அருண் ஜேட்லி.

தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டம் பெரும் சலசலப்பை உண்டு பண்ணி வருகிறது.

பிலிம் சேம்பரை நம்பி நூற்றாண்டு விழாவுக்கு போயிருக்கக் கூடாது! : ரஜினி குமுறல்

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் தமிழின் முன்னணி கலைஞர்கள் பலரும் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கும் நிலையில் பிலிம் சேம்பரை நம்பி நான் இந்த விழாவுக்கு போயிருக்கவே கூடாது என்று திடீரென்று தனது மனக்குமுறல்களை வெளியிட்டிருக்கிறாராம் ரஜினி.

மன்கோகன் சிங் பதவி விலக வேண்டும் - சந்திரபாபு நாயுடு


குற்ற பின்னணி உள்ள எம்பி, எம்எல்ஏ க்களை பாதுகாக்கும் வண்ணம் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை ராகுல் காந்தி "சட்டம் முட்டாள்தனமானது. கிழித்து குப்பையில் வீசுங்கள்" என்று விமர்சித்தார். 

இதனால் பிரதமர் மன்கோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார். 

மோடி-ரஜினி திருச்சி போஸ்டர் - எங்களுக்கு ஒன்றுமே தெரியாதே - லதா ரஜினிகாந்த்


ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நான்கு வயது சிறுமி பலி


திருவண்ணாமலை அருகே வயலில் வேலை பார்க்க சென்ற தாய் மலர்க்கொடியை காண சென்ற நான்கு வயதான சிறுமி தேவி சாக்குப் பையால் மூடி இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். 

மறக்கப்பட்ட குமரி தமிழன் : "திரு.ஜே.சி.டேனியேல்"

மறக்கப்பட்ட குமரி தமிழன் : "திரு.ஜே.சி.டேனியேல்"

கேரள சினிமாவின் தந்தையாக போற்றப்படும் நம் கன்னியாகுமரி மண்ணின் மைந்தனை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த திரு.ஜே.சி.டேனியேல் கன்னியாகுமரி மண்ணிலிருந்து (நாகர்கோவிலில்) கேரளாவின் முதல் திரைப்படமான "விகதகுமாரன்" - ஜ தயரித்து, இயக்கி, நடித்து கேரள சினிமாவின் தந்தையாக போற்றப்படுகிறார். இவர் பெயரில் கேரள அரசு வருடந்தோறும் "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி அவரை கௌரவப்படுத்துகிறது. சினிமா தயாரித்ததில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியால் பின்பு மருத்துவம் படித்து டாக்டராக பணியாற்றி வயோதிக காலத்தில் அகஸ்தீஸ்வரத்திலேயே வாழ்ந்து இப்பூவுலகை விட்டு மறைந்தார். அவரது கல்லறை அகஸ்தீஸ்வரத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சினிமாவின் நூற்றாண்டு நடக்கும் இத்தருணத்தில் அவரை நினைவு கூர்வோம்.

Lelin Raj posted toசற்றுமுன் செய்திகள்

Friday, 27 September 2013

கூகிளுக்கு இன்று பிறந்த நாள், சில சுவராசியமான தகவல்கள்



எந்த தொழில்நுட்பமும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் போது அதன் பலனை எல்லா மக்களும் அடையும் போது மகத்தானதாகிறது.

ஹெல்மட், பெல்ட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை

இருக்கை பெல்ட், ஹெல்மெட் அணியாதவர்கள் ஒட்டி வரும் வாகனங்களுக்கு, பெட்ரோல், டீசல் அளிக்கக் கூடாது என்று குஜராத், அகமதாபாத்தில் புதிய விதி அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் மூலம் போக்குவரத்து விதிகளை மக்கள் கடைப்பிடிப்பார்கள் என நம்புவதாக குஜராத் வாகனப் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

திமுக மாவட்ட செயலாளர் மீது செக்ஸ் குற்றச்சாட்டு : எதிரணி மீது அதிரடி நடவடிக்கை

தி.மு.க.வின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீது தமிழரசி என்ற தி.மு.க.பெண் பாலியல் புகார் கொடுத்திருந்தார்.

ஈழப்போரில் 40,000 கொல்லப்பட்டுள்ளனர், ஐ.நா.மனித உரிமை ஆணையம் அறிவிப்பு


இலங்கையில் 2009-ம் ஆண்டு ஈழப் போரின்போது 40 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதா க ஐ.நா. மனித உரிமை ஆணையம் இலங்கை அரசு மீது குற்றம் சாட்டி உள்ளது. 

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் நவி பிள்ளை இலங்கை அரசு தானாக முன்வந்து போர்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். இந்த அறிவுறுத்தலை இலங்கை அரசு நிராகரித்து உள்ளது. 

வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்று பதிவு செய்ய வகை செய்யவேண்டும் - உச்சநீதிமன்றம்


இந்தியா ஜனநாயக நாடு. இங்கே தேர்தலில் வாக்களிக்கும் வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றால் அவர்களை நிராகரிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு. வாக்களிக்கும் போது அதற்கான வசதிகளை வாக்களிக்கும் எந்திரங்களில் ஏற்படுத்தி தரவேண்டும் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - FIR - பட விமர்சனம்





மிஷ்கினின் தொடர்ந்து மூன்று தோல்விகளுக்கு பின் வந்திருக்கும் மிஷ்கின் படம், திரில்லர் ரக பாணியில் மெல்லிய நகைச்சுவை கூடவே இழையோடும் படம், எதார்த்தத்துக்கு மிக அருகில் எடுக்கப்பட்டுள்ளது, துப்பாக்கியால் சுடப்பட்டு குண்டடிபட்டு ரோட்டில் கிடக்கும் மிஷ்கினை அனைவரும் கை விட மருத்துவ கல்லூரி மாணவன் ஸ்ரீ காப்பாற்றுகிறார். அதன் பின் மிஷ்கின் காணாமல் போய்விட மிஷ்கினை தேடிப்பிடித்து சுடும் பொறுப்பு ஸ்ரீ தலையில் விழுகிறது, மிச்சம் என்ன ஆனது என்பது தான் படம்.

தற்போதைய ட்ரெண்ட் காமெடியன்கள் இல்லை, குத்துப்பாட்டு இல்லை, அபத்தங்கள் இல்லாமல் சமரசங்கள் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள படம், படத்தை சரியாக கவனித்து பிந்தொடடவில்லையென்றால் படம் புரியாமல் போக வாய்ப்புண்டு. உலக சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்ல நல்ல திரைப்படங்களை விரும்புபவர்களுக்கும் படம் பிடிக்கும்.

கொஞ்சநாள் கழித்து இது இந்த உலகப்படத்தின் காப்பி என்று யாரும் சொல்லவில்லையென்றால் நல்ல படத்தை தந்ததற்கு மிஷ்கினுக்கு ஒரு பாராட்டு.

மதிப்பெண்கள் 3.5 / 5

Thursday, 26 September 2013

மனைவியுடன் ஜெயிலுக்கு போன‌ சீமான்.



அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை 6 % ஆக உயர்த்த கோரி தோழர் நீலவேந்தன் தீக்குளித்து மரணம்



ஏமாற்றப்பட்ட டிடி மருத்துவகல்லூரி மாணவர்கள், கை கொடுக்க மறுக்கும் அரசு

உங்கள் ஆதரவை வேண்டும் ஏமாற்றப்பட்ட டிடி மருத்துவகல்லூரி மாணவர்கள், கை கொடுக்க மறுக்கும் அரசு, டாக்டர் படிப்பு கனவாகிடுமா? போராடும் மாணவர்கள், பெற்றோர்கள். 37வது நாளாக தங்கள் படிப்புக்காக போராடும் மாணவர்கள்.

மோடியை கான இலட்சம் பேர் கூடினார்கள் - திருச்சி இளந்தாமரை மாநாடு



மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட்ட பின் தமிழகத்திற்கு முதல்முறையாக வருகை தந்துள்ளார், திருச்சியில் இன்று பாஜக இளைஞர் பிரிவின் இளந்தாமரை மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

Wednesday, 25 September 2013

டிவியில் லைவ் ஆக ஜோடிகளின் செக்ஸ் காட்சிகள் - சேனல் 4 "செக்ஸ் பாக்ஸ்" ஷோ


டிவியில் லைவ் ஆக ஜோடிகளின் செக்ஸ் காட்சிகள் - சேனல் 4 தொலைக்காட்சியின் ன் கர்மம் பிடித்த "செக்ஸ் பாக்ஸ்" ஷோ

வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை,அரண்மனை போன்ற பழமையான வரலாற்று இடங்களில் ஷூட்டிங் நடத்த திடீர் தடை!



சாதி பிரச்சினையை கிளப்பி விஜயகாந்த்தை திட்டும் தாது மணல் திருட்டு கும்பல்

செய்யும் திருட்டு வேலைக்கு சாதி ஒரு கேடயமா? சாதி பிரச்சினையை கிளப்பி விஜயகாந்த்தை திட்டும் தாது மணல் திருட்டு கும்பல்

இனி 0% வட்டி தவணை கிடையாது, கிரெடிட் கார்டுக்கு சர்விஸ் சார்ஜ் வசூலிக்க கூடாது

இனி 0% வட்டி தவணை திட்டம் கிடையாது, கிரெடிட் கார்டுக்கு சர்விஸ் சார்ஜ் வசூலிக்க கூடாது என ரிசர்வ் பேங்க் அறிவிப்பு.

Tuesday, 24 September 2013

மனைவிக்கு பயந்து கொண்டு சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டேன் - அமெரிக்க அதிபர் ஒபாமா

ஆதார் அட்டை பெறுவது கட்டயாம் அல்ல

ஆதார் அட்டை பெறுவது கட்டயாம் அல்ல. விருப்பபட்டால் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 

மகாராஷ்டிர அரசு திருமணத்தை பதிவு செய்ய ஆதார் அட்டை அவசியம் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப் பட்டது.

இந்த விசாரணையில், ஆதார் அட்டை பெறுவது அவரவர் விருப்பம் என்று பதில் தந்துள்ளது மத்திய அரசு.

விரல் ரேகை, விழித் திரையைப் பதிவு செய்து ஆதார் அட்டை வழங்கும் திட்டம் 2009-ல் ஆரம்பிக்கப் பட்டது. இந்த திட்டத்திற்காக மட்டும் இது வரை ரூ. 50,000 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது. 

பிரேமானந்தா ஆசிரமத்தில் வெளிநாட்டு மாணவர் மர்ம சாவு

திருச்சி விராலிமலை, பாத்திமா நகரில் இயங்கி வரும் பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கி படித்து வந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து உள்ளார். 

கடலூர்-புதுவையில் தொடர்ந்து மோதிக்கொள்ளும் பாமக - விடுதலை சிறுத்தைகள், போலிஸ் துப்பாக்கி சூடு

கடலூர் மாவட்டத்திலும் புதுவையிலும் கடந்த சில நாட்களாக பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இது வன்னியர் தலித் மோதலாக உருவெடுக்கும் வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது.

Monday, 23 September 2013

தென்னிந்தியாவையை தன் கவர்ச்சியால் கட்டிப்போட்ட சிலுக்கு ஸ்மிதா நினைவு தினம்


தென்னிந்தியாவையை தன் கவர்ச்சியால் கட்டிப்போட்ட சிலுக்கு ஸ்மிதா நினைவு தினம் இன்று செப்டம்பர் 23ம் தேதி

ரஜினி, கமலை பின் வரிசையில் போய் உட்கார சொன்னது யார்? வாகை சந்திரசேகர் கிளப்பும் பஞ்சாயத்து

ரஜினி, கமலை பின் வரிசையில் போய் உட்கார சொன்னது யார்? உண்மையை பேச மறுத்து ஊமையாகி விட்டது ஏன்?  - வாகை சந்திரசேகர் கிளப்பும் பஞ்சாயத்து

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா நடந்தாலும் நடைபெறுகிறது தினம் ஒரு பஞ்சாயத்து கிளம்புகிறது,

எஸ்.பி.பி யிடமிருந்து மைக்கை பிடுங்கி மேடையில் தகராறு - நூற்றாண்டு இந்திய சினிமா விழாவில் நடந்த கூத்து

தமிழக அரசின் 10 கோடி பண உதவியில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இஷ்ராத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கு, மோடியின் இரண்டு அமைச்சர்களுக்கு சிபிஐ சம்மன்



குஜராத் கலவரம் பற்றி பேசும்போது மோடியின் முகத்தில் வருத்தமே இல்லை - மோடி மீது மகாத்மா காந்தியின் பேத்தி கடும் தாக்கு




மகாத்மா காந்தியின் பேத்தியான தாரா காந்தி பட்டாச்சார்யா குறிப்பிடும் போது குஜராத் கலவரம் பற்றி பேசும்போது மோடியின் முகத்தில் வருத்தமே இல்லை என்றார். இப்படி

பாஜகவுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணியா?


பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை சந்தித்தார், காங்கிரசை விளாசிய அவர் பாஜக வுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தற்போதைக்கு தான் எந்த வாய்ப்பையும் மறுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். எனவே சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியை நோக்கி நகருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

# சந்திரபாபுவுக்கு நல்ல நேரமே அமையாதா?

துர்கா சக்தி நாக்பால் சஸ்பென்ட் நடவடிக்கை ரத்து - உத்திரபிரதேச முதல்வர் உத்தரவு

மணற்கொள்ளை மாபியாக்களை மடக்கியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பாலின் சஸ்பென்ஸன் உத்தரவை இன்று வாபஸ் பெற்றது உ.பி. அரசு

Sunday, 22 September 2013

“வந்தார்; ஓரமாய் உட்கார்ந்தார்; சென்றார்…” : இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் விஜய்க்கு நடந்த அவமரியாதை!

அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ந்து விட்ட நடிகர் விஜய்க்கு நேரு ஸ்டேடியத்தில் நடந்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா பங்ஷனில் அவமரியாதை செய்யும் விதமாக சம்பவம் நடைபெற்றுள்ளது.

அன்று அஜீத்திற்கு அவமரியாதை, இன்று விஜய்க்கு அவமரியாதை - ஆளுபவர்களிடமிருந்து விடுதலை ஆகுமா சினிமா?


அன்று அஜீத்திற்கு அவமரியாதை, இன்று விஜய்க்கு அவமரியாதை - ஆளுபவர்களிடமிருந்து விடுதலை ஆகுமா சினிமா?

பெரிய ஆளுங்கிற மதிப்பெல்லாம் சினிமா எனக்கு போட்ட பிச்சை…: ரஜினி பேச்சு!

சென்னையில் நேற்று தமிழக முதல்வர் ஜெ தொடங்கி வைத்த இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் “எல்லோரும் என்னை உயரத்தில் தூக்கி வைத்து விட்டு, போய் விட்டார்கள். அதனால் நான் தனிமையில் இருக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது :

விஸ்வரூபம் ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு அனுப்பப்படவில்லை

கமலுக்கு இந்த ஆண்டும் ஆஸ்கர் அவார்ட் அவுட், விஸ்வரூபம் ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு அனுப்பப்படவில்லை

நைரோபி ஷாப்பிங் மால் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 59 பேர் பலி


கென்யாவின் தலைநகர் நைரோபியில் பிரபல ஷாப்பில் மால் தாக்குதல். இரண்டு இந்தியர்கள் உட்பட 59 பேர் பலி. தீவிரவாதிகள் உள்நுழைந்து 24 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் இன்னமும் ஷாப்பிங் மால் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சீனாவின் அதிகாரம்மிக்க அரசியல்வாதிக்கு ஆயுள் தண்டனை, சீனாவில் வாரிசு அரசியல், ஊழல் ஒரு அலசல்


சீனாவின் சக்திவாய்ந்த அரசியல்வாதிக்கு ஊழல் குற்றசாட்டில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சீனாவின் வாரிசு அரசியல், ஊழல் மற்றும் பழிவாங்கும் போக்கு ஒரு பார்வை.

இலங்கை வடக்கு மாகாண தேர்தல் முடிவுகள் - தமிழ்தேசிய கூட்டமைப்பு பெரும் வெற்றி

25 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற இலங்கையின் வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 28 இடங்களை வென்றுள்ளது.

மாட்டினார் மெய்யப்பன்! கைகழுவினார் சீனு மாமா!

குருநாத் மெய்யப்பன் மீது சீட்டிங் மற்றும் சட்டத்துக்கு புறம்பான சூதாட்டம் ஆகிய குற்றங்களுக்காக சிபிஜ குற்றப்பத்திரிக்கை(சார்ஜ் சீட்) கோர்ட்டில் தாக்கல்

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media